ஞாயிறு, 14 டிசம்பர், 2014

இது அநீதியான தீர்ப்புதான்...

அவரை புனிதரென்று புகழ்பாட போவதில்லை. ஆனாலும் அ.தி.மு.க. பொதுச்செயலாளர் ஜெயலலிதாவுக்கு தற்போது வழங்கபட்டிருக்கம் தண்டனை ரசிக்கத்தக்கதாக இல்லை என்பது உண்மைதான். 66கோடி ஊழல் செய்தார் என்பதாக இல்லாமல், சொத்து குவிப்பு வழக்காகத்தான் இன்றைக்கும் சொல்லப்படுகிறது. அவற்றையெல்லாம் மிஞ்சக்கூடிய வகையில் பல ஊழல்களும், சொத்து குவிப்புகளும் பல அரசியல்வாதிகளால் நிகழ்த்தப்பட்டிருக்கிறது. ஆனால், அவற்றுக்கெல்லாம் இப்படியான தண்டனை கொடுக்கப்பட்டிருக்கிறதா என்கிற கேள்வி எழவே செய்கிறது.
1991-96 வலையிலான ஜெவின் ஆட்சி பொது மக்களை மட்டுமல்ல அவரது கட்சியனரைக்கூட விமர்சிக்க வைத்தது. அதன் வெளிப்பாடுதான் 1996-ம் சட்டமன்ற தேர்தலில் படுதோல்வி என்கிற நிலைக்குச் சென்றது அதிமுக. ஆனால், தற்போதைய ஆட்சி காலத்தில் அவர் மேற்கொண்ட நடவடிக்கைகள் பலவும் மக்களிடம் நல்ல வரவேற்பையே பெற்றிருக்கிறது.

 அதன் பின்னுட்டமாக தான் உள்ளாட்சி மற்றும் இந்த நாடாளுமன்றத் தேர்தல்களில் அதிமுக பெற்ற வெற்றியைப் பார்க்க வேண்டியிருக்கு. திமுக உள்ளிட்ட அனைத்து எதிர்கட்சிகளுக்கு ஜெயாவின் இன்றைய செயல்களும், அவர் மீது மக்களிடம் ஏற்பட்டிருக்கும் நம்பிக்கையும் கிழியை ஏற்படுத்தவே செய்திருக்கும். அதனால் தான் ஜெயாவுக்கு எதிரான தீர்ப்பு உறுதி செய்யப்பட்டதும் வரவேற்று உற்சாகப் பேட்டி கொடுக்கிறார்கள். அவர்கள் அனைவரும் புனிதர்களாக என்பதை ஆய்ந்து பார்க்க வேண்டியது அவசியம்.
உண்மையில் ஜெவுக்கு எதிரான இந்த வழக்கில் பலருக்கும் இருக்கும் காழ்ப்புணர்ச்சியை காணமுடிந்தது. இங்கே நம்முடைய கேள்வி என்னவெனில், ஜெவுக்கு எதிரான வழக்கில் இத்தனை அக்கறை காட்டியவர்கள், ஆணவ ஆன்மீகக் குறியீடாக தண்டத்தோடு தண்டமாக சுற்றி வரும் சங்கரராமன் கொலைக்குற்றவாளி என்று கூறப்பட்ட காஞ்சி சங்கராச்சரியர் வழக்கில் ஏன் இத்தனை அக்கறை காட்டவில்லை.
ஜெயலலிதாவுக்கு எதிராக உச்சநீதிமன்றம் வரை சென்று போராடிய உத்தமர்கள், சங்கராச்சரி விசயத்தில் அங்கே வேண்டாம், குறைந்தபட்சம் உயர்நீதி மன்றம் வரையாவது சென்றிருக்கலாமே...? ஏன் அதை செய்யவில்லை....?
இராயிரம் மக்களை கொன்றொழிப்பவர்க்கு நாடாளும் பரிசை கொடுத்துவிட்டு, ஊழலுக்கு மட்டும் இந்த தண்டனை என்றால், நீதிமன்றத்தின் மீது எனக்கு அச்சமே ஏற்படுகிறது.... எத்தனையோ விசயங்களில் சூமோட்டோவாக வழக்கை நடத்தும் நீதியரசர்கள் இதுபோன்ற படுபாதக செயல்களின் போது வாய்மூடி மவுனிகளாக இருந்து விடுகிறார்களே ஏன்...?
ஆக, மனித உயிர்களை விடவும் கேவலம் பணத்திற்குத்தான் மதிப்பு என்று சொல்லாமல் சொல்லுகிறார்களா....?
என்றாலும், ஜெயலலிதாவிற்கு எதிராக வழங்கப்பட்டிருக்கும் இந்த தண்டனையே அவருக்கும் மக்களுக்குமான பெண்கள் மத்தியில் இணக்கத்தை அதிகரிக்கவேச் செய்யும் என்பதே நிதர்சனம்...

மக்களை கவரும் வகையில் நடவடிக்கைகளை மேற்கொள்ளாத மற்ற அரசியல் தலைவர்கள், ஜெ பெற்றிருக்கும் தண்டனை மூலம் அரசியல் எதிரியை வீழ்த்தியதாக கொக்கரித்து நிற்பது அநாகரீகமாகவே உணர்கிறேன். என்ன இருந்தாலும் இன்றைக்கு மட்டுமல்ல என்றைக்குமே மற்ற அரசியல் தலைவர்களுக்கு ‘ஜெயலலிதா சிம்ம சொப்பனம் தான்’........

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக