‘பதினோரு கோமாளிகள் விளையாட பதினோராயிரம் முட்டாள்கள் ரசிக்கிறார்கள்’ என்று கிரிக்கெட் விளையாட்டுப்பற்றி மிகச்சரியாக கணித்துக் கூறியவர் அறிஞர் பெர்னாட் ஷா. அவரின் கூற்று எந்தளவுக்கு உண்மை என்பது இந்தியாவில் மற்ற விளையாட்டுகளுக்கு ஏற்பட்டுவரும் நிலையை பார்த்தாலே புரியும்.
உலகளவில் அதிகமான மக்களால் ரசிக்கப்படுவதும், அதிக நாட்டினரால் விளையாடப்படுவதுமான கால்பந்தாட்டத்தில், இந்தியா இன்று வரை உலக கோப்பைப் போட்டியில் கலந்து கொள்ளும் தகுதிச் சுற்றுக்கே தகுதி பெற்றதில்லை என்கிற அவலம்.
ஒலிம்பிக் மற்றும் ஆசிய விளையாட்டுப் போட்டிகளில் பெயரறிய நாடுகளெல்லாம் பதக்கங்களை வாரிக்குவித்து அந்தந்த நாடுகளுக்கு பெருமை சேர்த்துக் கொண்டிருக்க இந்தியா மட்டும் ஒற்றைத் தங்கம் வாங்குவதற்கே தகிடுதத்தம் போடுகிற கேவலம்.
ஒரு காலகட்டத்தில் கொடிகட்டிப் பறந்த இந்தியாவின் தேசிய விளையாட்டு என்று வாயளவில் மட்டுமே சொல்லப்படுகிற ஹாக்கி இன்றைக்கு இருக்கும் இடம் தெரியாமல் தேய்ந்து போகும் பரிதாபகரம்.
இப்படி உலகின் பெரும்பாலான நாடுகளில் பெரும்பான்மை மக்களால் விளையாடப்படும் ஆரோக்கியமான அறிவுப்பூர்வமான எந்த விளையாட்டும் இந்தியாவில் வளர்ச்சி பெறவில்லை அல்லது வளர்க்கப்படவில்லை. அதற்குக் காரணம் என்ன என்று அறிவது மிக எளிதான ஒன்றுதான்.
இந்தியத் துணைக் கண்டத்தில் வாழும் பெரும்பாலான மக்கள் கொண்டாடும் விளையாட்டாக விளைவிக்கப்பட்டுள்ள கிரிக்கெட் மீதான மோகமும், அதனுடைய வளர்ச்சியும்தான் மற்ற எந்த விளையாட்டும் இங்கே எழுச்சி பெறாமல் போனதற்கான காரணம்.
இந்தியத் துணைக் கண்டம் பிரிட்டனின் ஆதிக்கத்திற்கு ஆட்பட்டிருந்தபோது அந்த நாட்டு பிரபுக்கள் தங்களது பொழுது போக்கிற்காக உருவாக்கப்பட்டதுதான் கிரிக்கெட் என்பது யாரும் மறுக்கமுடியாத உண்மை. இந்த மண்ணிற்கும் மக்களுக்கும் தொடர்பில்லாத இறக்குமதி செய்யப்பட்ட இந்த விளையாட்டு ஒட்டு மொத்த சமுதாயத்தையும் சீரழிக்கும் அவலம் இந்தியாவைத் தவிர வேறு எங்கும் கிடையாது.
இங்கிலாந்தின் காலனி ஆதிக்கத்திற்கு ஆட்பட்ட நாடுகளான இந்தியா, பாகிஸ்தான், பங்களாதேஷ், இலங்கை, தென்ஆப்ரிக்கா, ஆஸ்திரேலியா, ஜிம்பாவே, ஸ்காட்லாண்டு, கனடா, மேற்கத்திய தீவுகள், நியூசிலாந்து போன்ற நாடுகளில் மட்டும்தான் இன்றைக்கு இந்த மட்டைபந்து எனப்படும் கிரிக்கெட் விளையாடப்பட்டு அதிகப்படியாக ரசிக்கப்பட்டு வருகிறது.
குறிப்பாக இந்தியாவில்தான் இந்த கிரிக்கெட் பித்தர்கள் அதிகமாக இருக்கிறார்கள். கிரிக்கெட் பற்றி பேசினால் மேதாவிகள் என்கிற போக்கும் உருவாகி இருக்கிறது. இந்தியாவின் பல வீர விளையாட்டுகளை புறந்தள்ளிவிட்டு மக்களை இந்த கிரிக்கெட்டிற்குள் சுருட்டிய புண்ணியவான்கள் பார்ப்பனர்களைத் தவிர வேறுயாராக இருக்க முடியும்.
எப்பொழுதும் கடினப்படாமல் மற்றவர்களை ஏய்த்து பிழைப்பதையே தொழிலாகக் கொண்ட இந்த உச்சிகுடுமிகள் இங்கிலாந்து பிரபுக்களிடம் இருந்ததை இரவல் வாங்கி கிரிக்கெட்டில் கோலோச்சி விட்டனர். இந்தியாவில் கிரிக்கெட் புகழ் பெற்றது முதல் இன்று வரை அவர்களின் ஆதிக்கமே நிலைத்திருக்கிறது.
சுனில் கவாஸ்கர், ரவி சாஸ்திரி, வெங்சர்க்கார், ஸ்ரீகாந்த் என்று தொடங்கி சச்சிடெண்டுல்கர், கங்குலி, ராகுல் டிராவிட், கும்ப்ளே, சடகோபன் ரமேஷ் என்று கிரிக்கெட் பூணூல்களின் எண்ணிக்கைக் கூடிக்கொண்டே இருக்கிறது. 11 பேர் விளையாடும் கிரிக்கெட்டில் குறைந்தபட்சம் 8நபர்களாவது பார்ப்பனர்களாக இன்றைக்கும் இருக்கிறார்கள்.
ஏற்கெனவே ஊடகத்துறையை கையில் வைத்திருக்கும் பத்திரிகைப் பார்ப்பனர்கள் தங்களது இனஉணர்வின் காரணமாக கிரிக்கெட்டை புகழ்ந்து எழுதி, பேசி வருகின்றனர். அத்தோடு லாபம் ஒன்றையே நோக்கமாகக் கொண்ட வணிக நிறுவனங்களும் தங்கள் பொருள்களை மக்களின் தலையில் கட்ட இந்த விளையாட்டைப் பயன்படுத்திக் கொள்கின்றனர்.
சுமார் 60 நாடுகளில் விற்கவேண்டியப் பொருள்களை கிரிக்கெட் மூலமாக விளம்பரப் படுத்துவதன் மூலம் இந்தியாவில் விற்க முடியும் என்பதைப் புரிந்து கொண்ட பல பன்னாட்டு நிறுவனங்கள் இந்த விளையாட்டிற்கு ஸ்பான்சர் என்ற பெயரில் பணத்தை வாரியிறைக்கின்றன.
இந்தவரிசையில் மேலும் லாபத்தை ஈட்டும் ஒரே நோக்கத்தோடு, பல்லாயிரம் கோடிகளை சொத்தாகக் கொண்ட இந்திய கிரிக்கெட் வாரியத்தால் உருவாக்கப்பட்டதுதான் அய்பிஎல் கூ20 என்னும் சூதாட்டம். இந்த அய்பிஎல் என்பது முழுக்க முழுக்க வரி ஏய்ப்பு பெருமுதலாளி பெருச்சாளிகளை உள்ளடக்கியதாக இருக்கிறது. முகேஷ் அம்பானி, விஜய் மல்லையா, இந்தியா சிமெண்ட் சீனிவாசன் போன்ற தொழிலதிபர்களும், ஷாருக்கான், பிரித்தி ஜிந்தா, ஷில்பா ஷெட்டி போன்ற ஹிந்தி திரை நட்சத்திரங்கள். இப்படி இந்தியத் துணைக் கண்டத்தின் பெருமையை உலகிற்கு பறைசாற்ற கிளம்பும் சமூகப் போராளிகளின் எண்ணிக்கை கூடிக் கொணடே இருக்கிறது..!
கடந்த 2008 ஆம் ஆண்டு தொடங்கப்பட்ட இந்த டிவென்டி20 என்ற இருபது ஓவர் மட்டைபந்துப் போட்டி தற்பொழுது அய்ந்தாவது ஆண்டை முடித்து மற்ற போட்டிகளைக் கட்டிலும் அதிக கொள்ளையடித்துள்ளது இந்திய கேடுகெட்ட (மன்னிக்கவும்) கிரிக்கெட் வாரியம். இந்தப் போட்டியால் மட்டும் குறைந்தபட்சம் 20ஆயிரம் கோடி ரூபாயளவிற்கு சூதாட்டம் நடந்திருக்கும் என்பது பரவலான கருத்து.
ஏற்கனவே கிரிக்கெட் போட்டியில் இந்தியா-பாகிஸ்தான் அணிகள் மோதிக் கொள்ளும் போது (கவனிக்கவும் விளையாடும் போதல்ல) கோடிக்கணக்கான ரூபாய்க்கு சூதாட்டம் நடைபெற்று வந்தன. அந்த பெட்டிங்கையே மிஞ்சிவிடும் அளவுக்கு இந்த அய்பிஎல் சூதாட்டத்தில் தனித்த இடத்தை பெற்றிருக்கிறது.
இந்தப் போட்டிகளை நடத்துவதற்கான தொலைக்காட்சி உரிமம் கூட மிகப் பெரிய தொகைக்கு விலைபோயுள்ளது. இவற்றையெல்லாம் விட அய்பிஎல்லின் பக்கம் ரசிகர்களை கொண்டுவரவும் சியேர்ஸ் கேர்ள்ஸ் என்ற பெயரில் வெளிநாட்டுப் பெண்களை நாள் வாடகைக்குப் பிடித்து வந்து அரைகுறை ஆடையுடன் மைதானத்தில் ஆடவைத்த பெருமையை என்னவென்று சொல்வது.
குறிப்பாக இந்த ஆண்டுக்கான துவக்கவிழா கலைநிகழ்ச்சிகள் சேப்பாக்கம் மைதானத்தில் நடக்காமல் சென்னை ஒய்எம்சிஏ மைதானத்தில் நடைபெற்றது. கிரிக்கெட் மைதானத்தில் இரண்டு ஆட்டத்தையும் பார்க்கலாம் என்று காத்திருந்த ரசிகர்களுக்கு ஏமாற்றத்தை அளித்த கிரிக்கெட் வாரியம், கலைநிகழ்ச்சிகளை மட்டும் ஒய்எம்சிஏ மைதானத்தில் நடத்தியதன் வேறுஒன்றுமில்லை, அங்கேயும் ஒரு வசூல் வேட்டையை நடத்தத்தான்.
கிரிக்கெட் வாரியம் எதிர்பார்த்த மாதிரியே அய்பிஎல் துவக்கவிழா நிகழ்ச்சியைக் காண கலைபித்தர்கள் காசை வாரியிறைத்தனர் என்றுதான் சொல்லவேண்டும். கார்ப்பரேட் கம்பெனிகளின் கனவு நாயகன் அமிதாப் பச்சன், சல்மான் கான், பிரபுதேவா. கரீனா கபூர், பிரியங்கா சோப்ரா என்ற சினிமா பட்டாளங்களின் குத்தாட்டாங்களுடன் பாப் இசை பாடகி கேட்டி பெர்ரி சிறப்பு நடனத்தையும் ஆடினார். இவர்களுடன் ஆஸ்திரேலிய வீரர் போலிங்கர் ஆடிய நடனம் மகா மட்டமானதாக இருந்தது.
இங்கே நம்முடைய கேள்வியெல்லாம் ஒன்றுதான். கோயில் திருவிழாக்களில் நடத்தப்படும் நடன நிகழ்ச்சிகளை ஆபாசம் என்று தடைபோடும் காவல்துறையோ நீதிமன்றமோ கார்ப்பரேட் அளவில் நடத்தப்படும் இதுபோன்ற ஆபாச கூத்துகளை எப்படி அனுமதிக்கறது என்பதுதான். ஏனென்றால், இந்த நிகழ்ச்சிகளைக் காண மற்றவர்களைவிட முண்டியடித்து முன்வரிசையில் அமர்ந்திருந்தவர்களில் பெரும்பாலானோர் அய்ஏஎஸ், அய்பிஎஸ், மற்றும் நீதித்துறை சார்ந்தவர்கள்தான்.
இதைவிட கொடுமை என்னவென்றால், மேடையில் ஆபாச கூத்துகள் அரங்கேறிக் கொண்டிருந்த வேளையில் அதன் தாக்கம் கீழே ரசிகர்கள் நடுவேயும் கிளம்பி பப்புகள், டிஸ்கோத்தேகள் எல்லாம் தோற்றுப் போகுமளவுக் ஆட்டம் போட துவங்கிகினர். எல்லைமீறிப்போன இந்த கூத்துகளை அனைத்து ஊடகங்களும் படம் பிடித்துக் கொண்டிருந்தன. அங்கிருந்த காவலர்களோ நிகழ்ச்சி ஏற்பாட்டாளர்களோ ரசிகர்களின் கொண்டாட்டத்தை கட்டுபடுத்தாமல் அவர்களும் ரதிக்கு கொண்டிருந்தனர் என்பதுதான் கொடுமையிலும் கொடுமை.
அடுத்தாக ஒவ்வொருவருக்கிடையேயும் பரந்து விரிந்திருக்கிற சூதாட்டம், வெற்றி தோல்வியை நிருணயிக்க வீரர்களிடையே நடைபெற்ற பேரங்கள், வெற்றியை விட்டுகொடுக்க அணிகளுக்கு கைமாற்றப்பட்ட தொகைகள், மசியாத வீரர்களுக்கு சீயேர்ஸ் பெண்களுடன் விருந்து என ஆபாசங்களும் அருவருக்கத்தக்கதுமானதாகத்தான் நடந்து முடிந்திருக்கிறது அய்பிஎல்.
ஆக, இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியம் மற்றும் இந்தியன் பிரீமியர் லீக் குழுவின் கொள்கையெல்லாம் ஒன்றே ஒன்றுதான், எதைகாட்டியாவது ரசிகர்களிடம் பணம் பிடுங்கவேண்டும், விருவிருப்பை கூட்டவேண்டும் என்பதற்காக வீரர்களை எப்படியாவது மடக்குவது அதன்மூலம் கோடிகளை சுருட்டுவது. இவைதவிர கிரிக்கெட் வாரியத்திற்கு என்ன கொள்கை இருக்க முடியும்.
இப்படி அய்பிஎல் போட்டியின் மூலம் பல்லாயிரம் கோடி ரூபாய் லாபம் கிடைப்பதால், இதில் அரசியல்வாதிகள் தற்போது பினாமி பெயர்களில் நுழைவது அதிகரித்துள்ளது. இந்தியாவில் கிரிக்கெட் ஆட்டத்துக்கு பெருவாரியான ரசிகர்கள் இருக்கிறார்கள் என்கின்ற ஒன்றை மட்டுமே முதலீடாக வைத்து, எந்த உழைப்பும் இல்லாமலேயே ஒரு கூட்டம் மிக எளிதாக, பல ஆயிரம் கோடி ரூபாயை சம்பாதிக்கும் என்றால் அதை இந்திய அரசு வெறுமனே பார்த்துக் கொண்டிருக்கும் என்றால் இதன் பின்னணி என்ன?
லாட்டரி டிக்கெட்டை ஒழித்து விட்டோம், சூதாட்டத்தை மக்கள் நலன் கருதித் தடை செய்து விட்டோம் என்று கூறும் அரசு, அந்த லாட்டரி சூதாட்டத்தைவிட மிகமோசமானதாக மாறிவரும் கிரிக்கெட்டிற்கு கட்டுப்பாடுகளை விதிப்பதற்கோ அல்லது கிரிக்கெட் வாரியத்தை அரசு ஏற்று நடத்துவதற்கோ தயங்குவதேன்? ஆட்சியாளர்களுக்கும் மறைமுகமாக பங்கு போகிறதா என்கிற கேள்வி எழவே செய்கிறது.
ஏழைகள் நிறைந்த பணக்கார நாடு என இந்தியாவைப் பற்றிக் குறிப்பிடுவதுண்டு. இந்திய கிரிக்கெட் அதை அய்பிஎல் ஏலம் மூலம் நிரூபித்துக் கொண்டிருக்கிறது. இந்த வேளையில் இந்தியாவின் தேசிய விளையாட்டான ஹாக்கி அணியின் நிலையைப் பார்க்கும்போது வேதனையே ஏற்படுகிறது. இரண்டு ஆண்டிற்கு முன்னால் சம்பள பாக்கி, சிறப்பாக விளையாடியதற்கான ஊக்கத்தொகை உள்பட தலா நான்கரை லட்சம் ரூபாய் தரக் கோரி இந்திய ஹாக்கி அணியில் இடம்பெற்றுள்ள 22 பேரும் போராட்டம் நடத்தும் சூழலுக்குத் தள்ளப்பட்டனர்.
அந்த 22பேருக்குமாக சேர்த்து மொத்தமே 1கோடி ரூபாய்தான். அதுகூட கைவசம் இல்லாமல் தவித்தது இந்திய ஹாக்கி சங்கம். பின்னர், அணியின் ஸ்பான்சரான சகாரா நிறுவனம் தந்த நிதியை வைத்து பிரச்னையைச் சமாளித்தது. தேசிய விளையாட்டுக்கு ஏற்பட்ட தேசிய அவமானம் இது.
ஆனால், கிரிக்கெட்டைப் பொறுத்தவரை ஆண்டுக்கு 50 லட்சங்கள் வரை காண்ட்ராக்ட் பேசப்பட்டு கோடியில் புரளும் கிரிக்கெட் வீரர்கள் என்ற இந்த சூதாடிகள், அய்பிஎல் விளையாட்டின் மூலம் கோடிகளை அள்ளிச் செல்கின்றனர். இவைதவிர விளம்பரப் படங்களிலும் கோடிக்கணக்கில் சம்பாதித்துக் கொண்டிருக்கின்றனர்.
இந்தியாவில் மற்ற விளையாட்டுகள் வறட்சியில் வாடும்போது கிரிக்கெட்டுக்கு மட்டும் ஏன் இந்தப் பணமழை. ஒரு நாட்டின் வளர்ச்சி என்பது சமச்சீராக இருக்க வேண்டும். விளையாட்டுக்கும் அது பொருந்தும். இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியத்தை இந்திய அரசே ஏற்று, கிரிக்கெட்டால் கிடைக்கும் பணத்தை மற்ற விளையாட்டுகளை மேம்படுத்தப் பயன்படுத்தினால் என்ன? என்பதே நம் கேள்வி.
கிரிக்கெட் இந்திய விளையாட்டு அல்ல; இங்கிலாந்தில் இருந்து இறக்குமதியான விளையாட்டுக்குக் கொடுக்கப்படும் முக்கியத்துவம் இந்திய பாரம்பரிய விளையாட்டுகளுக்கு இல்லாதது அவமானகரமானது.
இந்திய கிரிக்கெட் அணி ஏதாவது ஒரு கோப்பையை வென்றுவிட்டால் நாடாளுமன்றம் பாராட்டுகிறது. குடியரசுத் தலைவர், தலைமை அமைச்சர், நடுவன் அமைச்சர்கள் வாழ்த்துச் செய்தி அனுப்புகின்றனர். ஊடகங்கள் தலைப்புச் செய்தியாக வெளியிட்டு புளகாங்கிதம் அடைகின்றன.
கிரிக்கெட்டை போலவே மற்ற விளையாட்டுகளுக்கும் ஆதரவு தாருங்கள் என நாடாளுமன்றமோ, குடியரசுத் தலைவரோ, தலைமை அமைச்சரோ சொல்வதில்லையே ஏன்..? சம்பளபாக்கி கேட்கிறது ஹாக்கி; கோடிகளில் கொழிக்கிறது கிரிக்கெட். இந்தியாவின் பார்ப்பனர், பார்ப்பனர் அல்லாதார் என்ற ஜாதிய ஒடுக்குமுறை போலவே இதுவும் இந்திய விளையாட்டின் இருமுகங்கள் என்பதை மக்கள் உணர்ந்து அபினைவிட மிக ஆபத்தான கிரிக்கெட்டை ரசிப்பதை விட்டுவிட்டு மற்ற விளையாட்டுகளை ஊக்கப்படுத்த முயல வேண்டும்.
கிரிக்கெட்டிற்கு போதிய ரசிகர்கள் இல்லையென்றால் கார்ப்பரேட் நிறுவனங்களும், ஊடகங்களும் தங்களது பார்வையை மற்ற விளையாட்டுகளில் செலுத்தும். அரசுகள் கூட மற்ற விளையாட்டுகளை ஊக்கப்படுத்தும வகையில் நிதிகளை ஒதுக்க முயலும். இவையெல்லாம் நடைமுறைப்படுத்த மக்களின் மாற்றத்தால் மட்டுமே சரிப்படும் என்பது என் கருத்து. உங்களுக்கு எப்படி...-?