புதன், 19 செப்டம்பர், 2012

ஒரு கண்ணில் வெண்ணெய்


ஒரு கண்ணில் சுண்ணாம்பு...?

சென்னையிலும் தமிழகத்தின் பிற பகுதிகளிலும் அடுத்தடுத்து பள்ளி மாணவ மாணவியர் விபத்துக்களில் சிக்கி உயிரிழந்து வருவது தமிழக மக்களை பதறடித்து வருகிறது. 
அண்மையில் சென்னை சேலையூரில் உள்ள ஜியோன் பள்ளியில் படித்து வந்த மாணவி ஸ்ருதி, பள்ளிப் பேருந்தில் பயணித்தபோது, பேருந்தின் ஓட்டை வழியாக கீழே விழுந்து அதே பேருந்து நசுங்கி பரிதாபமாக உயிரிழந்தாள். இந்த சம்பவம் தமிழக மக்களை துடிதுடிக்க வைத்தது.
இந்த கொடூர சம்பவத்திற்கு அடுத்த நாளே வேலூர் மாவட்டத்தில் ஒரு பள்ளி மாணவி தனது பள்ளி வேனின் சக்கரத்திலேயே சிக்கி உயிரிழந்தாள். இந்த சம்பவமும் தமிழகத்தை அதிர்ச்சியில் ஆழ்த்தியது. இந்நிலையில் அடுத்து சில நாளிலேயே சென்னையில் பிரபலமான பத்ம சேஷாத்ரி பள்ளியில் ஒரு 4ம் வகுப்பு மாணவன் அநியாயமாக உயிரிழந்துள்ளான். 
இந்தப் பள்ளியில் திரைப்பட இயக்குநர் மனோகர் என்பவரின் மகன் ரஞ்சன் 4ம் வகுப்பு படித்து வந்தான். சம்பவம் நடந்த காலையில் பள்ளிக்குள்ளேயே உள்ள நீச்சல் குளத்தில் 4ம் வகுப்பு மாணவர்களுக்கு நீச்சல் பயிற்சி கொடுக்கப்பட்டிருக்கிறது. அப்போது ரஞ்சன் நீரில் மூழ்கி இறந்து விட்டான். இச்சம்பவமும் பொது மக்களிடையே பெரும் அதிர்ச்சி அலைகளை ஏற்படுத்தியது.
மற்ற இரண்டு பள்ளிகளில் நடந்த சம்பவத்தை ஒட்டி எடுக்கப்பட்ட நடவடிக்கைக்கும் பத்ம சேஷாத்ரி பள்ளியில் நடைபெற்ற சம்பவத்தை ஒட்டி எடுக்கப்பட்ட நடவடிக்கைக்கும் பெரு வித்தியாசத்தை சமூக அக்கறை கொண்டவர்கள் நிச்சயம் விமர்சித்திருப்பார்கள். 
பள்ளியில் உள்ள நீச்சல் குளத்தில் மாணவன் மூழ்கி இறந்ததும் செய்தி அறிந்து பொது மக்கள், செய்தியாளர்கள் உள்ளிட்டோர் பள்ளியை முற்றுக்கை இட்டபோது அவர்களை பள்ளிக்குள் அனுமதிக்காமல் பள்ளி நிருவாகம் தடுத்துள்ளது.
காவல்துறையினர் வந்தபின் இந்த சம்பவம் தொடர்பாக நீச்சல் பயிற்சியாளர் ராஜசேகர், நீச்சல் குள பொறுப்பாளர். உதவியாளர், விளையாட்டு ஆசிரியர், துப்புரவு பணியாளர் என 5 பேர் மீது கவனக்குறைவாக இருத்தல் (304 ஏ) என்ற பிரிவில் வழக்குப்பதிவு செய்து அவர்களை கைது செய்தனர். ஆனால், பள்ளி நிருவாகியான திருமதி ஒய்ஜிபி மீதோ முதல்வர் இந்திரா மீதோ மற்றவர்கள் மீதோ இதுவரை வழக்கு எதுவும் பதிவு செய்யவில்லை.
நீச்சல குளத்தில் இறந்த மாணவனுக்கு உடல் நிலை சரியில்லை, வலிப்பு வந்துவிட்டது, இதனால்தான் இறந்து விட்டான் என்று பொறுப் பற்ற தன்மையில் பேசிய பள்ளி நிருவாகத்தினர் மீது ஏன் கடுமையான நடவடிக்கையை எடுக்கவில்லை என்பதுதான் சமூக அக்கறை கொண்டவர்களின் கேள்வியாக இருக்கிறது.
ஜியோன் பள்ளியில் கடந்த மாதம் பள்ளிப் பேருந்திலிருந்து விழுந்து மாணவி ஸ்ருதி பலியான சம்பவத்தில், தானாக முன்வந்து வழக்குப்போட்டது சென்னை உயர்நீதிமன்றம். அதன் பின்னரே அரசு சுதாரிப்படைந்து கைது, சஸ்பெண்ட் உள்ளிட்ட நடவடிக்கைகளைப் போட்டது. இந்த வழக்கை விசாரித்த தலைமை நீதிபதி எம்.ஒய். இக்பால், ஏன் கைது செய்யப்பட்டவர்கள் மீது கொலை வழக்குப் போடப்படக் கூடாது என்று கேள்வி எழுப்பியிருந்தார். அதன் பின்னர் ஜியோன் பள்ளி நிருவாகியான தாளாளர் விஜயன், அவரது இரு தம்பிகள் உள்ளிட்டோர் கைது செய்யப்பட்டனர். தற்போது பத்மா சேஷாத்திரி பள்ளியில் நடந்துள்ள சம்பவத்தில் முழுக்க முழுக்க அஜாக்கிரதையே காரணம் என்று காவல்துறையே கூறியுள்ளது. அப்படி உள்ள நிலையில் படு சாதாரணமான கவனக்குறைவு காரணமாக என்ற பிரிவில் வழக்குப் போட்டுள்ளனர். இந்த பள்ளி நிருவாகத்தினர் மீது ஏன் கொலை வழக்குப் போடக்கூடாது என்று மக்கள் கேட்கிறார்கள். 
இச்சம்பவங்களுக்கிடையே மற்றொரு செய்தி யையும் குறிப்பிட வேண்டியது அவசியமாகிறது. சென்னையை அடுத்த திருப்பெரும்புதூரில் உள்ள ஜேப்பியார் பொறியியல் கல்லூரி வளாகத்தில் கட்டப்பட்டு வந்த உள் விளையாட்டரங்கம் இடிந்து விழுந்து 10தொழிலாளிகள் பாலியாகினர். அந்த சம்பவத்திற்கு காரணம் அக்கல்லூரியின் நிருவாகியான ஜேப்பியார்தான் என்று கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார்.

ஆனால் பத்ம சேஷாத்ரி பள்ளி விவகாரத் தில் அப்பள்ளியின் தாளாளர் திருமதி ஒய்ஜிபியோ மற்ற நிருவாகிகளோ யாரும் கைது செய்யப்படவில்லை, அவர்கள் மீது வழக்கும் போடப்படவில்லை. இது என்ன வகை நீதி என்று புரியவில்லை. திருமதி ஒய்ஜிபியின் நேரடி கண்காணிப்பில்தான் இப்பள்ளி நிர்வாகம் நடக்கிறது. மற்ற தனியார் பள்ளிகளில் எல்லா மக்களும் தங்கள் குழந்தைகளை சேர்ப்பதுபோல் இப்பள்ளியில் சேர்த்துவிட முடியாது. இடஒதுக்கீட்டு முறையை எதிர்க்கும் ‘உயர்’ குடிமக்களுக்கு மட்டுமே முன்னுரிமை தரப்பட்டு மறைமுகமாக உயர்குடிகளுக்கு மட்டும் இடஒதுக்கீடு பின்பற்றி வந்ததுதான் இந்த பள்ளியின் நிருவாகம். இப்பொழுது யாரால் அதிகப்படியான கட்டணத்தை செலுத்த முடியுமோ அவர்களுக்கு மட்டுமே சேர்க்கை என்ற நடைமுறை. 
அப்படி சேர்க்கப்பட்ட மாணவர்கள் பள்ளிக் கட்டணத்தைக் கட்ட சற்று தாமதமானாலும் கூட டிசி கொடுத்து விடுவோம் என்று மிரட்டலும், கடுமையான கட்டுப்பாடும், எதற் கெடுத்தாலும் பணம் என்கிற பிடுங்கல் இதுதான் அப்பள்ளியின் நிருவாகமாக இருந்து வருகிறது. இந்த நிலையில் ஒரு அப்பாவி மாணவனை அநியாயமாக சாக விட்டுள்ளனர் என்பதே பலரின் குற்றச்சாட்டாக இருக்கிறது. 
இந்நிலையில் திருமதி ஒய்ஜிபி உள்ளிட்டோர் மீது நடவடிக்கை எடுக்க அரசும் காவல்
துறையும் தயங்குவதன் காரணத்தை மிக எளிதாக அறிந்து விடலாம். சமச்சீர் கல்வியை கைவிடுவதற்கு இன்றைய தமிழக அரசு முயன்ற போது அதற்காக அமைக்கப்பட்ட குழுவில் ஒரு உறுப்பினராக முதல்வரால்  பரிந்துரைக்கப் பட்டவர்தான் இந்த திருமதி ஒய்ஜிபி. என்றழைக்கப்படும் ராஜலட்சுமி ஒய்ஜி பார்த்தசாரதி. பணக்காரர்களுக்காக பள்ளியை நடத்தும், அதுவும் ஸ்டேட் போர்ட் பாடத் திட்டத்தைப் பின்பற்றாத ஒரு தனியார் பள்ளியின் நிர்வாகியை எப்படி இந்தக் குழுவில் சேர்க்கலாம் என்று எதிர்ப்புகள் கிளம்பின என்பது நினைவிருக்கலாம். 
ஆக, முதல்வரின் நம்பிக்கைக்கு பாத்திரமானவர் என்பதுதான் நடவடிக்கை எடுக்காமல் விட்டதற்கான காரணமாக இருக்கிறதோ என்கிற சந்தேகம் மக்கள் நடுவே ஏற்பட்டிருக்கிறது. 
பெருவாரியான மக்களின் ஆதரவோடு ஆட்சிக்கட்டிலில் சிறப்பாக பணியாற்றிவரும் தமிழக முதல்வர் மீது இம்மாதிரியான குற்றச் சாட்டு எழுவதற்கு காரணமாக அமைந்துவிட்ட பத்ம சேஷாத்ரி பள்ளி நிருவாகத்தின் மீது மற்ற கல்வி நிருவனங்கள் மீது எடுக்கப்பட்ட நடவடிக்கைபோல் கடுமையான நடவடிக்கையை தமிழக முதல்வர் மேற்கொள்ள வேண்டும் என்பதே சமூக ஆர்வலர்களின் கருத்து.
அப்படி இல்லாத பட்சத்தில் ஒரு கண்ணிற்கு வெண்ணெய்யும் மறு கண்ணிற்கு சுண்ணாம்பு தடவியது போலாகிவிடும்.

நிதி முதல் ஈமு வரை


பேராசை  பெருநட்டம்
கவர்ச்சிகரமான திட்டங்கள் விளம்பரங்கள் போன்றவற்றின் மூலம் காலத்திற்கு தகுந்தாற் போல் மக்களை தொடர்ந்து ஏமாற்றி கோடிக் கணக்கில் கொள்ளையடிக்கும் மோசடி கும்பல் களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்தே வருகிறது. நாள், வார, மாதச்சீட்டுகள், ஏலச் சீட்டுகள், வைப்பு தொகைக்கு அதிக வட்டி, தேக்கு வளர்த்தல், டேட்டா என்ட்ரி மூலம் அதிக பணம், தங்க நாணயம், தவணை முறையில் நிலம், கோடீஸ்வரராக்கும் இரிடியம், “ஆன்-லைன்’ லாட்டரி என பல்வேறு மோசடிகள் தொடர்ந்து நடைபெற்றுத்தான் வருகின்றன.
திடீரென ஒருநாள் அந்த மோசடிகள் வெளிச்சத்துக்கு வருவதும் அதைப்பற்றி மக்கள் பரபரப்பாக சிறிதுகாலம் பேசுவதும் பின்னர் மறந்து போவதும் வாடிக்கையான ஒன்றாகி விட்டது. என்றாலும் இந்த ஏமாற்றங்களின் மூலம் பாதிக்கப் படும் மக்களோ அல்லது அதைப்பற்றி தெரிந்து கொண்ட மக்களோ விழிப்புணர்வு பெற்றிருக் கிறார்களா என்றால், அதுதான் இல்லை. தங்களை அடுத்த ஏமாற்றத் திற்கு தயார் படுத்திக் கொள் கிறார்கள் என்பதுதான் கவனிக் கத்தக்க ஒன்று.
கடந்த சில ஆண்டு களில் இது மாதிரி யான மோசடிகள் மூலம் பல்லாயிரம் கோடி ரூபாய் சுருட்டப் பட்டிருக்கும் என்பது தான் கவனிக்கத்தக்க ஒன்று. மிகப்பெரிய மோசடிகள் எல்லாம் கடந்த 15ஆண்டுகளுக்குள்ளாகத்தான் இருக்கும். இரண்டாயிரம் ஆண்டுகளில் வெளிவந்த முதலீட்டுக்கு 20விழுக்காடு 30விழுக்காடு வட்டி என்கிற பேராசை கொள்ளத் தக்க கவர்ச்சித் திட்டத்தினை முன்வைத்து தமிழ்நாடு முழுக்க பல்வேறு தனியார் நிதி நிறுவனங்கள் தனது மோசடியை அரங்கேற்றின. அதன்மூலம் சுருட்டப்பட்ட தொகை பல்லாயிரம் கோடி ரூபாய். இந்நிறுவனங்களில் பணம் போட்டு வாழ்க்கையைத் தொலைத்தவர்களும் பல்லாயிரம் பேர்.
அடுத்ததாக டேட்டா என்ட்ரி மூலம் லட்சக் கணக்கில் சம்பாதிக்கலாம் என்று கிளம்பிய கணினி நிறுவன மோசடி. இந்த மோசடிக்கு ஏமாந்து முன்னைவிட அதிகமானோர் தங்களது பணத்தை இழந்தனர். அடுத்ததாக ஆங்காங்கே நடைபெற்றுவரும் ஏலச்சீட்டு மோசடி, தவணைமுறை நிலமோசடி என்று நீண்ட பட்டியலே இருக்கிறது. 
இதில் அண்மையில் பலரையும் மிரட்டி யது தங்க நாணயம் தருவதாக 1800 கோடிக்கும் மேல் சுருட்டிய கோல்ட் கோஸ்ட் மற்றும் கோல்ட் நெட் நிறுவனங்களின் மோசடி. இவற்றையெல்லாம் கண்ணுற்ற மக்கள் கொஞ்சமேனும் விழிப்படைந்திருந்தால் அடுத்த மோசடி நடைபெறாமல் இருக்கும். ஆனால் அப்படி எந்த அதிசயமும் நடந்து விடவில்லை.
இப்போதைய மோசடி கோல்டில் இருந்து கோழிக்கு மாறியிருக்கிறது. அது இன்றைக்கு மிகப்பரவலாக பேசப்படும் ஈமு கோழி வளர்ப்பு தொடர்பானது. மற்ற கோழிகளை விட இந்தக் கோழி சற்றே பெரிது என்பதால் அதன் மோசடி தொகையும் அதிகமாகவே இருந்திருக்கிறது. தமிழ்நாடு முழுக்க புற்றீசல்போல் பரவி வந்த இந்த ஈமு கோழி வளர்ப்புத் திட்ட மோசடி மூலம் கிட்டத்தட்ட 500கோடி ரூபாய் வசூலிக்கப்பட்டிருக்கும் என்கிறார்கள் விசயம் அறிந்தவர்கள்.

ஈமுவை அடுத்து நாட்டுக் கோழி மோசடியும் வெளிச்சத்திற்கு வந்திருக்கிறது. இதில் ஏமாற்றப் பட்டவர்களின் எண்ணிக்கையும் அதிகமாகவே இருப்பதுதான் ஆச்சரியத்திலும் ஆச்சரியம். ஏனென்றால், ஈமு கோழி வளர்ப்புத் திட்டத்திற்கு என்னவிதமான கவர்ச்சித் திட்டங்கள் சொல்லப் பட்டதோ அதில் அணுவளவும் மாறாமல் இதற்கும் சொல்லப்பட்டிருப்பதுதான். சிலந்தி வலையில் மாட்டும் விட்டில் பூச்சிகள் போல் இந்த கவர்ச்சிகரமான மோசடிகளில் தொடர்ந்து மக்கள் சிக்கிக் கொள்வதன் காரணம் வேறொன்றுமில்லை பேராசைதான். எதைச் செய்தாவது வாழ்வில் விரைவாக அதிகப் பணம் சம்பாதிக்க வேண்டும் எனப் பேராசை கொண்டவர்களே பெரும்பாலும் இத்தகைய மோசடி நிறுவனப் பேர்வழிகளின் வலைகளில் எளிதாக சிக்கிக் கொள்கின்றனர். இதில் பாமரர்&-படித்தவர், பெண்கள்&-ஆண்கள், கீழ்&மேல் அரசு ஊழியர்கள் என்ற பேதமெல்லாம் இருப்பதில்லை. ஏமாறுவது என முடிவெடுத்த பிறகு சமத்துவ மாய் ஏமாற வேண்டியதுதானே!
சிறிய முதலீடு, அதிக வட்டி, ஒருமுறை நிறுவனத்தில் சேர்ந்துவிட்டால் “ஆயுள்வரை’ (பெரும்பாலும் அது அந்த நிறுவனத்தின் ஆயுளாகத்தான் இருக்கும்!) பெருகிக்கொண்டே இருக்கும் லாபம், ஆச்சர்யமூட்டும் பரிசுகள், சில வேளைகளில் வெளிநாட்டு சுற்றுலாப் பயணம் என பட்டியலில் அடங்காத வசீகர வாக்கியங்கள் மக்களை வளைத்துப் போட்டுவிடுகின்றன. மோசடி செய்ய வேண்டும் என்ற குறிக் கோளுடன் தொடங்கப்படும் இதுபோன்ற நிறுவனங்கள், முதலில் சேருவோருக்கு அதிக லாபத்தைத் தந்து அவர்களின் மூலம் செலவில்லா விளம்பரத்தையும் தேடிக்கொள்கின்றன. பல ஆயிரங்கள் கிடைத்து தாங்கள் பலனடைந்ததாக பிறர் கூறக் கேட்ட பிறகும், சராசரி மனிதரின் உள்ளம் சும்மாயிருக்குமா?
கூடுதலாக ஆட்களை சேர்த்துவிடுபவர் களுக்கு ‘கண்ணா ரெண்டு லட்டு திங்க ஆசையா...!’ என்கிற பாணியில் சிறப்பு பரிசுகள்  என்கிற அறிவிப்புகளும் பலரையும் இதுபோன்ற மோசடிகளில் விழ வைத்துவிடுகிறது. ‘குரங்கு தான் கெட்டதும் அல்லாமல் மொத்த வனத்தையும் கெடுத்த தாம்’ என்கிற பழமொழி நிச்சயம் பொய்யாகத்தான் இருக்கும். ஆனால் வாலில்லா இந்த மனிதக் குரங்குகள் செயல் பாட்டில் உண்மை இருக்க த்தான் செய்கிறது. தான் மட்டும் ஒரு மோசடி நிறுவனத்தில் இணைந்துவிட்டு சும்மா இருந்து விடுவதில்லை. மாறாக, தன்னுடன் இருப்பவர்களையும் சேர்த்தே அந்த குழிக்குள் தள்ளுகிறது. அப்புறம் என்ன ‘உன்னால் நான் கெட்டேன், என்னால் நீ கெட்டாய்’ கதைதான். மக்களின் இந்த மனநிலை ஒருபுறம் இருக்க மோசடி நிறுவனங்கள் தங்களின் வளர்ச்சிக்கு எடுத்துக் கொள்ளும் முயற்சிகள் பற்றியும் நாம் சிந்திக்க வேண்டியிருக்கிறது. 
மக்களின் பலவீனங்களை நன்றாகவே அறிந்துவைத்துள்ள மோசடி நிறுவனங்கள் தொலைக்காட்சி உள்ளிட்ட ஊடகங்களின் வழியே தங்கள் நிறுவனங்களின் விளம்பரங்களை அடிக்கடி ஒளிபரப்பி, மக்களை வசப்படுத்தி, தங்கள் நிறுவனத்தின் திறப்பு விழாக்களை மிகவும் பிரம்மாண்டமாக நடத்திவிடுகின்றன.

விழாவுக்கு பிரபலமான சிறப்பு விருந்தினர் களாகத் திரைப்பட நட்சத்திரங்களோ, அரசியல் வாதிகளோ, மாவட்ட ஆட்சியரோ, காவல்துறை உயர் அதிகாரிகளோதான் அழைக்கப்படுகின்றனர். அந்தப் பிரமுகர்களுடன் நிறுவனத்தின் பிரமுகரும் புகைப்படம் எடுத்துக் கொண்டு அதைப் பெரிய அளவிலான புகைப்படமாக்கி நிறுவனத்தின் அலுவலகத்தில் காட்சிக்கு வைத்து விடுகிறார்கள். இவற்றை கண்டுதான் நம்மில் பலரும் ஏமாந்து விடுகிறார்கள்.

அதிக லாபத்திற்கு ஆசைப்பட்டு பெருநட்டம் அடைந்து வாழ்க்கையை தொலைப்பதை விடுத்து ஒரு ரூபாய் என்றாலும் நியாயமான வழியில், உண்மையுடனும், நேர்மையாக உழைத்துக் கிடைக்கும் செல்வமே நிலைக்கும். அப்படிப்பட்ட பொருளே தேவை என்ற எண்ணம் ஆழப் பதிந்து, மக்கள் நெஞ்சில் மாற்றம் வந்துவிட்டால் அதன் பின்னர் ஏமாற்று வோருக்கு வேலையிருக்காது. மாறாக, அவர்கள்தான் ஏமாந்துபோவார்கள்.

வெள்ளி, 10 ஆகஸ்ட், 2012

தனியார் துறைகளில் வஞ்சிக்கப்படும் தாழ்த்தப்பட்டோர்...!



ஜாதிய ஒடுக்கு முறைக்கும் தீண்டாமைக்கும் பெயர் ‘போன’ இந்தியாவில், இன்னும் அந்தக் கொடுமை இம்மியளவும் குறையாத நிலை நீடிக்கிறது. 
நாட்டின் வேலைவாய்ப்புக்கு முக்கிய ஆதாரமாகத் திகழும் தனியார் துறையில் தாழ்த்தப்பட்ட மற்றும் பழங்குடி மக்கள் முற்றாகப் புறக்கணிக்கப்படும் 
நிலைதான் இப்போதும் உள்ளது.தனியார் தொழிற்சாலைகள் நிறைந்திருக்கும் 
பல மாநிலங்களில் தாழ்த்தப்பட்ட மற்றும் பழங்குடி வகுப்பினருக்கான வேலை வாய்ப்பு மிக மிகக் குறைவாகவே உள்ளதாக பல புள்ளிவிவரங்கள் 
கூறுகிறது.
மஹாராஷ்டிரா, குஜராத், கர்நாடகா, மத்திய பிரதேசம், ராஜஸ்தான் மற்றும் மேற்குவங்க மாநிலங்களில் பெரும்பான்மையாக இம்மக்களுக்கு தனியார் துறையில் மிகக் குறைந்த அளவே, அதுவும் சாதாரண கூலி வேலைகள் ஒதுக்கப்படுகின்றன.
மஹாராஷ்டிராவில் மொத்த மக்கள் தொகையில் அதற்கேற்ப மக்கள் தொகையில் 43.4 விழுக்காடு மக்கள் பழங்குடியினர். சரி இவர்களுக்கு இந்த 
தனியார் தொழிற்சாலைகளில் எவ்வளவு வேலை வாய்ப்பு? 20 சதவீதத்துக்கும் குறைவு. இந்த வேலைகள் அனைத்துமே உடல் உழைப்பு சார்ந்த சாதாரண 
வேலைகள்தான்!
வட மாநிலங்களில் டெல்லி மற்றும் ஹரியானாவில் தாழ்த்தப்பட்ட மற்றும் பழங்குடி இனத்தவருக்கு தனியார் துறையில் ஓரளவுக்குதான் வேலை வாய்ப்பு கிடைத்திருக்கிறது. ஆனால் பஞ்சாப் மற்றும் ராஜஸ்தான் 
மாநிலங்களில் மக்கள் தொகையில் தாழ்த்தப்பட்ட மற்றும் பழங்குடி இனத்தவரின் விகிதத்தைவிட அவர்களுக்கு தனியார் துறையில் கிடைத்திருக்கும் வேலை வாய்ப்பு விழுக்காடு கணிசமாக குறைந்தே 
இருக்கிறது.
நாட்டின் கிழக்கு மாநிலங்களில்தான் அதிகளவு தாழ்த்தப்பட்ட மற்றும் பழங்குடியினர் தனியார் துறைகளில் வேலைவாய்ப்புகளைப் பெற்றிருக் கின்றனர் 19.1% தாழ்த்தப்பட்ட மற்றும் பழங்குடியினர் உள்ளனர். ஆனால், அவர்கள் தனியார் துறைகளில் பெற்றுள்ள வேலை வாய்ப்பு என்னவோ 5 விழுக்காடுதான். இதுவும் கூட கூலி மற்றும் அதற்கு சமமான வேலைகள் தான்!
குஜராத் மற்றும் கர்நாடக மாநிலங்களில் மொத்த மக்கள் தொகையில் தாழ்த்தப்பட்ட, பழங்குடியின மக்கள் தொகையினர் 22% மற்றும் 23%. ஆனால் தனியார் துறை வேலைவாய்ப்புகளில் இவர்கள் பெற்றுள்ளதோ வெறும் 9 விழுக்காடு கூலி வேலைகளே.
இதைவிட கொடுமை என்னவெனில் சத்தீஸ்கர் மாநிலத்தில் ஏராளமான தொழிற்சாலைகள் இருக்கின்றன. என்பது ஆறுதல் பட்டுக்கொள்ளக்கூடிய செய்தி. அதற்குக் காரணம், அப்பகுதி மக்கள் சுயமரியாதை உணர்வோடு விடுதலை வேண்டி போராடி வருவதின் காரணமாகத்தான்.
அதேபோல் கேரளம் 100 விழுக்காடு கல்வி கற்ற மாநிலம். அம்மாநிலத்தின் மொத்த மக்கள் தொகையில் தாழ்த்தப்பட்ட மற்றும் பழங்குடி இன மக்களின் 
விழுக்காட்டைவிட கூடுதலாக தனியார் துறையில் வேலை வாய்ப்பு அவர்களுக்கு கிடைத்திருக்கிறது.இந்த விசயத்தில் தமிழ்நாடு ஓரளவுக்கு பரவாயில்லை என்றுதான் சொல்லவேண்டும். 
தமிழ்நாட்டில் தாழ்த்தப்பட்ட மற்றும் பழங்குடியினர் எண்ணிக்கை 20 சதவீதமாக உள்ளது. இவர்களில் 18 சதவீதம் பேருக்கு தனியார் துறைகளில் வேலைகள் அளிக்கப்படுகின்றன. ஆனால், அத்தகைய வேலைகளில் அதிகாரிகள் மட்டத்தில் அதிகம் சேர்க்கப்படுவ தில்லை. மாறாக, உயர் வகுப்பினர் ஈடுபட விரும்பாத வேலைகள் மட்டுமே அதிகப்படியாக அவர்களுக்கு ஒதுக்கப்படுகிறது. சுயமரியாதை ஜாதி ஒழிப்பு என்றிருந்த பெரியார் பிறந்த தமிழ்நாட்டின் நிலை இது என்றால், மற்ற மாநிலங்களைப் பற்றி சொல்லவா வேண்டும்.
தனியார்துறையிலும் இடஒதுக்கீடு பின்பற்ற வேண்டும் சமூகநிதி காக்கப்பட 
வேண்டும் என்பது தமிழகத்தின்  நீண்டகால கோரிக்கையாக இருந்து வருகிறது.இந்த கோரிக்கையை வலுவிழக்கச் செய்வதில் குறியாக உள்ளனர் ஆதிக்க ஜாதியினர். அவர்களின் கட்டுப்பாட்டில்தான் பெரும்பாலும் தனியார் நிறுவனங்கள் உள்ளன.
நான் ஜாதி முறைக்கு எதிரானவன். ஜாதிய ஒடுக்குமுறை எனக்குப் பிடிக்காது என்று கூறிக் கொள்ளும் இந்த ஜாதீய சக்திகள், உள்ளுக்குள் இரட்டை டம்ளர் முறைகளை ஆதரிப்பவர்களாகவும், இட ஒதுக்கீட்டை ஒழிப்பதில் ஆர்வம் காட்டுகிறவர்களாகவும் உள்ளனர். அதாவது தாழ்த்தப்பட்ட மற்றும் பழங்குடியின மக்கள் தங்களுக்கு நிகரான பதவிகளை தனியார் துறையில் 
பெற்றுவிடக் கூடாது என்பதில் குறியாகவும் உள்ளனர்.

இந்த நிலையை மாற்றுவதற்குரிய மனிதநேய சிந்தனை அனைத்து மக்களிடமும் எழுந்தால் மட்டுமே சமத்துவம் எல்லா இடங்களிலும் பரவ வாய்ப்பிருக்கிறது.

எரிக்கப்படும் குடிசைகள் துரத்தப்படும் மக்கள்


சிங்காரச் சென்னைக்கு பலியாகும் ஏழைகள்


சிங்காரச் சென்னையை உருவாக்குகிறோம் என்கிற பெயரில் அரசுகள் எடுக்கும் நடவடிக்கைகளில் முதன்மையான திட்டம் என்னவென்றால், குடிசைகளை அப்புறப்படுத்துவதுதான். ஏனென்றால், சென்னையின் அழகை கெடுத்துக் கொண்டிருப்பது குடிசைகள் தான் என்ற எண்ணம் ஆட்சியாளர்கள் மற்றும் அதிகாரிகளின் பொது புத்தியில் உருவாகி இருப்பதுதான். 
இவர்களின் எண்ணத்திற்கு பலியான குடிசைகளும் மக்களும் எண்ணற்றவை. கடந்த பல ஆண்டுகளாகவே கூவம் நதியோரம் இருப்பவர்ளையும் சாலையோரம் வசிப்பவர்களையும் நாகரீக வாழ்விற்கு இட்டுச் செல்கிறோம் என்ற போர்வையில் அவர்களின் வாழ்விடங்களை விட்டு அப்புறப்படுத்தி நகருக்கு வெளியே துரத்தி வருகின்றன இந்த அரசுகளும், அரசு எந்திரங்களும். அரசின் இந்த நடவடிக்கைக்கு எதிர்ப்பு தெரிவித்து காலி செய்ய மறுக்கும் மக்களை வஞ்சகமாக துரத்தும் போக்கு அதிகரித்து வருகிறது.
குறிப்பாக கடந்த 2009ஆம் ஆண்டின் மய்யத்தில் சென்னையில் வளர்ச்சிப் பணிகள் மேற்கொள்ளப்படுகிற பகுதிகளில் திடீர்த் தீவிபத்துக்கள் ஏற்படத் தொடங்கின. கூவம் முதலான கழிவு நீர்ச் சாக்கடைகளாக மாற்றம் பெற்றுள்ள நதிக் கரைகளின் ஓரம் அமைந்திருந்த குடிசைப் பகுதிகள் பலவும் கமுக்கமான முறையில் தீப்பற்றி எரிந்து சாம்பலாயின. அக் குடிசைகளில் வாழ்ந்து வந்த எளிய மக்கள் செம்மஞ்சேரி முதலான தொலைவிலுள்ள மாற்று இடங்களுக்குச் செல்லுமாறு வற்புறுத்தப்பட்டனர். 
எரிக்கப்பட்ட குடிசைப் பகுதிகளில் வாழ்ந்தவர்களை அங்கிருந்து வெளியேற வேண்டுமென்று ஏற்கனவே எச்சரிக்கப்பட்டவர்கள் என்பது கவனிக்கத்தக்கது. கமுக்கமான முறையில் தீப்பிடிக்கும் பகுதிகள் அனைத்தும், வளர்ச்சித் திட்டங்கள் மேற்கொள்ளப்படக்கூடிய பகுதிகளாக இருப்பது பல்வேறு சந்தேகங்களுக்கு இடமளிக்கக்கூடியதாக இருக்கிறது. இந்த கமுக்கமான விபத்துகள் அடித்தள மக்களின் நலன்களில் அக்கறையுள்ள பலரின் கவனத்தையும் ஈர்த்தன என்பதை நாம் சொல்லத் தேவையில்லை.
சென்னை பெருநகரில் அண்மையில் இரண்டு பெரிய தீவிபத்துகள் சமூக ஆர்வலர்கள் நடுவே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. முதலாவது சென்னை கிரீம்ஸ் சாலையில் கூவம் நதிக்கரையை ஒட்டி அமைந்துள்ள மக்கீஸ் கார்டன் அல்லது திடீர் நகர் (ஆற்றோரப் பகுதி) என்று அழைக்கப்படுகிற குடிசைப்பகுதி கடந்த ஒரு மாதத்திற்குள்ளாக மும்முறை தீவிபத்து ஏற்பட்டு சுமார் 130க்கும் மேற்பட்ட குடிசைகள் அழிந்துள்ளன. அம்மக்கள் இன்று மழையிலும் வெயிலிலும் இருக்க இடமின்றி அவதிப்பட்டு வருகின்றனர்.
இந்நிலையில் கடந்த சில நாட்களுக்கு முன் கலைஞர் நகர் (கே.கே.நகர்) பகுதியில் ஏற்பட்ட திடீர் தீவிபத்தில் 300க்கும் மேற்பட்ட குடிசைகள் எரிந்து போயின. அந்த மக்களுக்கு சரியான மாற்றிடம் கொடுக்கப்படாததாலும் உரிய நிவாரணம் கிடைத்திடாத காரணத்தினாலும் சாலைகளில் தங்கவேண்டிய அவலத்திற்கு ஆளாகினர். இந்த இரண்டு பகுதிகளும் வளர்ச்சிப் பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிற பகுதிகள் தான். இவர்களும் இடத்தை காலி செய்யச் சொல்லி ஏற்கனவே எச்சரிக்கப்பட்டவர்கள் தான் என்பதை நாம் கவனத்தில் கொள்ள வேண்டும்.
இந்த திட்டமிட்ட விபத்துகள் குறித்து ஏற்கனவே குடிசை மக்கள் வாழ்வுரிமை இயக்கம்’ என்னும் அமைப்பு சமூக ஆர்வலர்கள் பலரையும் உள்ளடக்கிய உண்மை அறியும் குழு ஒன்றை அமைத்து ஒரு விரிவான அறிக்கையை அளித்தது. 
அக்குழு இது தொடர்பான பல அம்சங்களையும் ஆய்வு செய்து இரு பகுதிகளாக அவ்வறிக்கையை உருவாக்கியது. முதற்பகுதி இத் தீவிபத்துக்கள் மக்களை வெளியேற்றுவதற்கான ஒரு திட்டவட்டமான சதியாக இருக்கலாம் என்கிற அய்யத்தை முன் வைத்து விசாரணை ஒன்றைக் கோரியது. அத்தோடு பாதிக்கப்பட்ட மக்களுக்கான உடனடி நிவாரணங்கள் குறித்த கோரிக்கைகள் சிலவற்றையும் முன் வைத்தது. இரண்டாவதாக ஏற்கனவே தொலை தூரங்களில் குடியேற்றப்பட்ட மக்கள் வசிக்கும் பகுதிகளின் அவலங்களைச் சுட்டிக்காட்டி, அவர்களுக்கான உடனடி நிவாரணங்கள் குறித்தும், நிலப் பறிப்பு மற்றும் மீள் குடியேற்றம் குறித்தும் காத்திரமான சில பரிந்துரைகளை முன் வைத்தது.
இவ்வறிக்கை உரிய அமைச்சர்கள் மற்றும் அதிகாரிகளுக்கு அனுப்பப் பட்டதோடு ஆயிரக்கணக்கான பிரதிகள் அச்சிடப்பட்டு மக்கள் நடுவே வினியோகிக்கவும் பட்டன. எனினும் அரசு இதை முற்றிலுமாகப் புறக்கணித்தது. பாதிக்கப்பட்ட மக்களுக்கு எந்தப் பலன்களும் கிட்டவில்லை என்பதோடு குடிசைகள் எரிக்கப்படுவதும் மக்கள் வெளியேற்றப்படுவதும் தொடர்கிறது.

இந்தக் குடிசைப் பகுதிக்கு இணையாகத்தான் கூவத்தின் மறுகரையில் மதுரவாயிலிலிருந்து சென்னைத் துறைமுகத்தை இணைக்கும் அதிவேக உயர் நெடுஞ்சாலைப் பணி நடை பெறுகிறது. இதற்காக அமைக்கப்படும் தூண்கள் இவ் வீடுகளுக்கு நேர்ப் பின்புறம் அமைந்துள்ளன. இந்தப் பணி நடைபெறும் இடங்களில் அமைந்திருந்த பல குடிசைப் பகுதிகளும் இப்படித்தான் மூன்றாண்டுகளுக்கு முன் திடீர் திடீரென எரிந்து சாம்பலாயின. 
அதேபோல் கடந்த ஜூலை 30ஆம் நாள் இரவு சென்னை கே.கே.நகர் காசி தியேட்டர் அருகே ஜாபர்கான்பேட்டையில் அமைந்துள்ள அம்பேத்கார் நகர் குடிசை பகுதிகள் திடீர் தீவிபத்தில் ஏற்பட்டது. இதனால்  குடிசைகளில் இருந்த மக்கள் அலறியடித்துக்கொண்டு குழந்தை குட்டிகளுடன் வெளியே ஓடி வந்தார்கள். தீ விபத்தில் பாதிக்கப்பட்ட 3 ஆயிரத்திற்கும் மேற்பட்ட மக்கள் சாலையோரம் பொருட்களோடும், குழந்தை குட்டிகளோடும் கதறி அழுதது மிக கொடுமையான நிகழ்வு.
இந்த தீவிபத்தில் 300-க்கும் மேற்பட்ட குடிசைகள் எரிந்து நாசமாகி இருக்கலாம். மீதமுள்ள குடிசைகள் அடுத்தடுத்த விபத்துகளில் காலி செய்யப்பட்டாலும் ஆச்சரியப்படுவதற்கில்லை. 

தீ விபத்தைக் காரணம் காட்டி அம்மக்களைச் செம்மஞ்சேரி முதலான தொலைதூரப் பகுதிகளுக்கு விரட்டியடிக்கும் அரசு முயற்சி கண்டிக்கத் தக்கது. அது அம்மக்களின் வாழ்வில் பெரிய அழிவை ஏற்படுத்தும். பாதிக்கப்பட்ட அம் மக்கள் அனைவரும் தலித்கள். முதல் தலைமுறையாகப் படிக்க நேர்ந்துள்ள அவர்களின் குழந்தைகளின் எதிர்காலமும் இதனால் பாழாகும். எனவே அரசு இம்முயற்சியைக் கைவிட வேண்டும். அவர்களை மீண்டும் அங்கேயே வசிக்க அனுமதிப்பதோடு ஏற்கனவே குடும்ப அட்டை, மின்வசதி ஆகியவற்றுடன் நீண்டகாலமாக அங்கேயே வாழ்ந்தவர்கள் என்கிற வகையில் அவர்களுக்கு அமைச்சர் வளர்மதி அவர்கள் தேர்தல் காலத்தில் வாக்களித்தபடி கூவம் கரையில் தடுப்புச் சுவர் எழுப்பி கான்க்ரீட் வீடுகள் கட்டித் தர வேண்டும்.
அல்லது 5 கி.மீ சுற்றளவுக்குள் இடம் ஒன்றை அரசு கைப்பற்றி அதில் அவர்களுக்கு அடுக்குமாடிக் குடியிருப்பு ஒன்றைக் கட்டித் தரவேண்டும். இத்தகைய பரிந்துரைகளையும் கோரிக்கைகளையும் வைக்கும்போது அப்படி ஒரு இடம் இருந்தால் சொல்லுங்கள் எனக் கோரிக்கை வைப்பவர்களிடமே அரசு தரப்பில் பதிலுரைப்பதை விடுத்து ஆக்கப்பூர்வமாக செயல்பட வேண்டும். நிறைய அரசு நிலங்கள் முதலியவற்றைத் தனியார்கள் ஆக்ரமித்துள்ளனர். பஞ்சமி நிலங்கள், வக்ஃப் நிலங்கள் ஆகியவையும் இவ்வாறு ஆக்ரமிக்கப்பட்டுள்ளன. 
அரசு நினைத்தால் தற்போது சென்னை நகருக்குள் வசிக்கும் குடிசைப் பகுதியினரை நகருக்குள்ளேயே குடியமர்த்த வாய்ப்புண்டு. அதை நடைமுறைப்படுத்த தேவை அரசின் கவனமும் அக்கறையும்தான் .

செவ்வாய், 19 ஜூன், 2012

அச்சச்சோ...! வந்தாச்சு... டெசோ...!!



கலைஞரின் பிறந்தநாளான கடந்த ஜூன்-3 அன்று சென்னையில் நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் தனித்தமிழீழம் அமைய மீண்டும் ‘டெசோ’ விழுப்புரத்தில் மாநாடு நடைபெறும் என்று பிறந்தநாள் செய்தியாக அறிவித்திருந்தார். உண்மையில் கலைஞரின் இந்த ஈழப் பாசத்தை நாம் புரிந்து கொள்ளாமல் இல்லை. அல்லல்படும அம்மக்களுக்கு எந்தவகையிலேனும் ஒரு விடிவு கிடைத்தால் சரிதான் என்பது அனைத்து மக்களின் கருத்து.
இந்நிலையில் கலைஞரின் டெசோ அமைப்பு முடிவின் பின்னணியை சற்றே சீர்து£க்கிப் பார்க்க வேண்டியது அவசியமாகிறது.
திமுக தலைவர் கருணாநிதி ஈழத்தமிழர்களின் நல்வாழ்வுக்காகப் போராடுகிறார் என்பதை ஈழ மக்களல்ல தாய்தமிழகத்தின் மக்களே ஏற்றுக்கொள்வார்களா என்பது சந்தேகமே.
அதற்கு தமிழ்உணர்வாளர்கள் சொல்லும் காரணம், ஈழ மக்கள் சிங்கள&இந்திய கூட்டுச் சதியால் கொத்து கொத்தாக செத்துக் கொண்டிருந்தபோது 2009இல் நடைபெற்ற திருமங்கலம் இடைத்தேர்தல் வெற்றிக் களிப்பிலும் மு.க.அழகிரியின் 59ஆம் பிறந்தநாள் கொண்டாட்டத்தில் 59கிலோ கேக் வெட்டி கொண்டாடி மகிழ்ந்து கொண்டிருந்தார் கலைஞர் என்பதுதான்.
அதே நேரத்தில் நாடாளுமன்றத்திற்கு தேர்தல் நடந்த நேரத்தில் ஈழ மண்ணில் நடந்த சோகத்தைக் கண்டுகொள்ளமால், ஆட்சி அதிகாரத்தை பிடிப்பதிலேயே கவனம் செலுத்தினார். ஈழத் தமிழர் துயரை துடைக்க மறந்தும்கூட டெல்லிக்குப் போகாத கலைஞர் தன் குடும்பத்தைச் சேர்ந்தவர்களுக்காக நடுவண் அமைச்சரவையில் முக்கியமான துறைகளைக் கேட்டு டெல்லிக்குப் போய் தனது கட்சிக்கான பிரதிநிதித்தும் பெற போராடினார்.
இந்த அக்கறையை சிங்கள கடற்படையினரால் 500க்கும் மேற்பட்ட தமிழக மீனவர்கள் நாளும் தாக்குதலுக்கு உள்ளாகி இறந்தபோது காட்டவில்லை. ஆனால் ஒருமுறைகூட இலங்கையில் தமிழர்களுக்கு எதிராக நடத்தப்படுகிற போரை நிறுத்தச்சொல்வதற்காகப் போகவேயில்லை. அறுபது ஆண்டுகளாக ஈழ மண¢ணில் நடக்கிற அட்டூழியங்களை எதிர்த்து உலக நாடுகள் குரல்கொடுத்திருக்கின்றன. முள்ளிவாய்க்காலில் நடந்தது இனப்படுகொலை என்றும் அதுபற்றி விசாரணை நடத்தவேண்டும்  என்றும்  போர்க்குற்றமாக அறிவிக்க வேண்டும் ஐநா சபைகூட கண்டனம் தெரிவித்துவிட்டது.

இந்நிலையில்கூட கருணாநிதி எந்த நிலைப்பாடும் எடுக்காதவராக இருந்தார்.
அதிமுககூட ஈழத் தமிழர் விசயத்தில் தனது நிலைப்பாட்டை மாற்றியதன் காரணமாக ஆட்சி மாற்றத்திற்கு வழிவகுத்தது. ஆனால், ஈழத்தமிழினத்தை அழிப்பதற்கு திமுகவும் காரணமாக இருந்துவிட்டது என்கிற கருத்து சாதாரண மனிதர்களைக்கூட சென¢றடைந்திருந்தது. இவ்வளவு பெரிய துயரம் நடந்தபோது அதைப் பார்த்துக் கொண்டிருந்தாரே என்கிற கவலை யாரிடமும் தீரவில்லை.
மக்கள்மீது  பிரயோகிக்கக்கூடாத வேதிப்பொருள் குண்டுகள், பெரும் அழிவைத் தரும் கொடூரமான ஆயுதங்கள் அப்பாவித் தமிழர்களை அழித்துச் சிதைத்தன. 60 ஆயிரம் தமிழர்கள் வீதிகளில், வீடுகளில், வனாந்தரங்களில் கருணையின்றி சாகடிக்கப்பட்டனர். 3 லட்சம் தமிழர்கள் திறந்தவெளி சிறைகளில் குடிக்கக்கூட நீரின்றி அடைக்கப்பட்டனர். உலகில் எந்த இனத்திற்கும் இப்படியான கொடுமைகள் நடக்கக்கூடாது. தமிழைப் பேசியதால், தம¤ழர்கள் என்ற அடையாளத்தாலேயே அவர்கள் சித்திரவதைகளுக்கு ஆளாக்கப்பட்டனர். தமிழினத் தலைவர் என்று சொல்லக்கூடிய தலைவர் வாக்கு அரசியலுக்காக ஈழத் தமிழர்களின் அழிவை வெறுமனே பார்த்துக் கொண்டிருந்தார். இந்திய அரசின் ஒத்துழைப்போடுதான் இலங்கையில் போர் நடந்தது. எந்தவித எதிர்ப்பும் காட்டாமல் அமைதிகாத்த காங்கிரஸ் கூட்டணி அரசில் பங்குவகித்த முக்கிய கட்சிக்கும் அதில் பங்குண்டு.
ஒரு முக்கியமான கருத்து, கருணாநிதியை நம்பியோ திமுகவை நம்பியோ ஈழப்போராட்டம் நடைபெறவில்லை. இறுதிப் போர் முடிந்த நிலையில், உலகமெங்கும் வாழ்கிற புலம்பெயர்ந்த தமிழர்கள் அரசியல் போராட்டத்தை முன¢னெடுத்திருக்கிறார்கள்.  ஈழத்துக்கு கருணாநிதி தேவையில்லை. அவருக்குத்தான் ஈழம் தேவை.
அரசியல் ஆதாயத்துக்காக மீண்டும் டெசோவை கையில் எடுத்திருக்கிறார். தேர்தலில் ஈழத் தமிழர்களுக்கு ஆதரவான வாக்குகள் அனைத்தும் அதிமுகவுக்குப் போய்விட்டது. பெரும் போர் நடந்துகொண்டிருந்தபோது சகோதர யுத்தம் என்று சொல்லி  திசைதிருப்பினார். திமுகவில்தான் சகோதர யுத்தம் நடந்துகொண்டிருக்கிறது.

ஒரு மனிதாபிமான அடிப்படையிலாவது 18 மைல் தூரத்தில் நடந்த கொடுமையை எதிர்த்து குரல் எழுப்பியிருக்கலாம். தமிழகத்தில் எந்த எதிர்ப்பலையும் உருவாகாமல் பார்த்துக்கொண்டார். ஒரு மாநிலத்தின் முதல்வராக  மட்டும்  அவரைப் பார்க்கவில்லை. ஒட்டுமொத்த தமிழர்களின் தலைமையாகப் பார்க்கிறார்கள். துயருற்றுக் கிடந்தபோது கடமையைச் செய்யாமல் இப்போது தோழமை மையம் என்று பேசுகிறார். எந்தக் காலத்திலும் இது அவருக்கு கைகொடு¢க்காது. ஒரு சிலரை ஒரு கட்டத்தில் ஏமாற்றலாம். எல்லோரையும் எல்லா நேரத்திலும் ஏமாற்றமுடியாது. ஈழத்தில் நடந்ததை நினைத்தால் நம்மால் ஒரு மத்தாப்பைக்கூட கொளுத்த முடியவில்லை. நமக்குள் அது மிகப்பெரிய அவமானமாக சோகமாக இருக்கிறது. ஈழத்துக்கு  எதிர்காலம்  இருக்கிறது. டெசோவுக்கு எதிர்காலம் கிடையாது என்பதுதான் தமிழுணர்வாலர் பலரிடம் எழுந்துள்ள கருத்தாகும்.

சிறுவானியின் குறுக்கே தடுப்பணை...? கேரளாவின் சண்டித்தனம்.


மத்தளத்திற்கு இரண்டு பக்கம்தான் அடிவிழும். ஆனால், தமிழனுக்கு எல்லாப்பக்கமும் அடிதான். காவிரிப் பிரச்சனையில் தமிழகத்திற்கு கிடைக்கவேண்டிய நியாயமான உரிமையை மறுக்கும் கர்நாடகம், பாலாற்றின் உரிமையை மறுக்கும் ஆந்திரம், முல்லைப் பெரியாற்றின் உரிமையை மறுக்கும் கேரளம் என்று தொடர்ச்சியாக தமிழகத்தை பாலைவனமாக்க நம் அண்டை மாநிலங்கள் கங்கணம் கட்டிக் கொண்டு அலைகின்றன.
குறிப்பாக அண்மையில் முல்லைப் பெரியாறு பிரச்சனையில் கேரளம் நடந்து கொள்ளும் விதம் மிகவும் அருவருக்கத்தக்கதாகவே இருக்கிறது. இந்த விசயத்தில் நம் முதல்வர் ஜெயலலிதா எடுத்த அதிரடியான நடவடிக்கையால் உம்மன்சாண்டியின் சண்டித்தனம் ஒடுங்கித்தான் போனது.
குறிப்பாக முல்லைப் பெரியாறு அணையை பலப்படுத்தும் விவகாரத்தில் முட்டுக்கட்டையாக இருந்த கேரளத்தை பணிய வைக்கும் விதமாக இந்திய பிரதமருக்கு எழுதிய கடிதத்தில் மத்திய பாதுகாப்புப் படையை முல்லைப் பெரியாறு பகுதிக்கு அனுப்புங்கள். இல்லையென்றால், தமிழக காவல்துறை அந்த வேலையை செய்யும் என்று மன்மோகனின் மண்டையில் உரைக்கும் விதமாக குறிப்பிட்டிருந்தார்.
இதனால் அடிப்போன மத்திய & கேரள அரசுகள் உடனடியாக பணிந்ததோடு அணையில் ஏற்படுத்தப்பட்ட துளைகளை அடைக்க ஒப்புக் கொண்டு ஒதுங்கிக் கொண்டது.
தமிழக வரலாற்றில் இத்தணை திடமாக நடுவண் அரசை முதல்வர் ஜெயாவைப் போல் வேறுயாரும் அதிரவைத்ததில்லை என்றுதான் சொல்ல வேண்டும். இந்நிலையில் முல்லைப் பெரியாறு பிரச்சனையில் முக்குடைந்த கேரள அரசு தமிழகத்திற்கு வேறு வழியில் நெருக்கடியை கொடுக்க வேண்டும் என்கிற நடவடிக்கையில் இறங்கியுள்ளது.

தென்மாவட்டங்களின் நீர்த்தேவைக்கு எப்படி முல்லைப் பெரியாறு அமைந்திருக்கிறதோ அதைப்போலவே கோவை மக்களின் நீராதாரமாக சிறுவணி அமைந்திருக்கிறது. உலகின் இரண்டாவது சுவையான நீர் என்கிற பெருமையோடு கொங்கு மக்களின் தாகத்தைத் தீர்த்துவந்த இந்த சிறுவாணி ஆற்றின் குறுக்கேதான் தடுப்பணைக்கட்ட தற்போது கேரள அரசு முடிவு செய்திருக்கிறது.
அண்மையில் கேரள முதல்வர் உம்மண்சாண்டி தலைமையில் நடைபெற்ற கூட்டத்தில் கேரள மாநிலம் அட்டப்பாடி பள்ளத்தாக்கு பகதியில் 8387 ஹெக்டேர் நிலங்களுக்கு பாசன வசதியை ஏற்படுத்துவதுடன், குடிநீர் மற்றும் மின் திட்டங்களையும் செயல்படுத்துவதற்காக சிறுவானி ஆற்றின் குறுக்கே 47 மீட்டர் நீளத்திற்கு தடுப்பணைக்கட்ட முடிவு செய்யப்பட்டிருக்கிறது.
இதற்காக 460 கோடி ரூபாய் நிதி ஒதுக்கீடு செய்யவும் கேரள அரசு தீர்மானித்திருக்கிறது. இந்த அணைக் கட்டப்பட்டால் சிறுவானி ஆற்றில் இருந்து ஒரு சொட்டு நீர் கூட கோவைக்கு வராது. ஏற்கனவே குடிநீர் தட்டுப்பாடால் திணறிக்கொண்டிருக்கும் கோவையை மேலும் வறட்சியாக்க வேண்டும் என்கிற நோக்கிலேயே இந்த தடுப்பணைத் திட்டத்தை ஆரம்பித்திருக்கிறது கேரள அரசு-.

கேரளத்தின் இந்த முடிவால் கோவை மாநகரில் குடிநீர் வினியோகம் கடுமையாக பாதிக்கப்படும். அதுமட்டு மின்றி பவானி ஆற்றில் தண்ணீர்வரத்து குறைந்து விவசாயமும் பாதிக்கப்படும் ஆபத்து உள்ளது.
இரு மாநிலங்களுக்கு இடையே பாயும் ஆறுகளின் குறுக்கே தடுப்பணைக் கட்ட வேண்டும் என்றால் கடைமடை பாசனப் பகுதி அமைந்துள்ள மாநிலத்தின் அனுமதி பெறப்பட வேண்டும் என்பது விதியாகும். ஆனால், சிறுவானி ஆற்றின் குறுக்கே தடுப்பணைக் கட்ட தமிழக அரசு கடந்த 30 ஆண்டுகளாக எதிர்ப்பு தெரிவித்து வரும் நிலையில் அதை பொருட்படுத்தாமல், புதிய தடுப்பணைக்கட்ட கேரள அரசு முடிவு செய்திருப்பது கண்டிக்கத்தக்கது.
உச்ச நீதிமன்ற தீர்ப்பை மதிக்காமல் முல்லைப் பெரியாறு அணையின் நீர்மட்டத்தை உயர்த்த மறுத்துவரும் கேரள அரசு, பவானி மற்றும் பாம்பாற்றின் குறுக்கே புதிய அணைகளை கட்ட ஏற்கனவே திட்டமிட்டிருக்கிறது. தற்போது சிறுவானி ஆற்றின் குறுக்கேயும் தடுப்பணையைக் கட்ட கேரள அரசு முயல்வது தமிழகத்தின் ஆற்றுநீர் உரிமைகளை பறிக்கும் செயலாகும்.
காவிரி, முல்லைப்பெரியாறு, பாலாறு என பல்வேறு ஆற்று நீர் உரிமைகளை தமிழக விவசாயிகள் ஏற்கனவே இழந்து தவித்துவரும் நிலையில், மீதமுள்ள ஆற்றுநீர் உரிமைகளையாவது பாதுகாக்க வேண்டிது தமிழக அரசின் கடமையாகும்.
சிறுவானி ஆற்றின் குறுக்கே தடுப்பணைக் கட்டும் கேரள அரசின் முயற்சிகளை தடுப்பதற்கு சட்டப்படியாகவும், அரசியல் ரீதியாகவும் நடவடிக்கை எடுக்க முதல்வர் ஜெயலலிதாவின் அதிரடிதான் கைகொடுக்கும் என்பதால் கோவையின் சிறப்பிற்கு காரணமாக விளங்கும் சிறுவாணியின் உரிமையை நிலைநாட்ட முதல்வர் ஆவான செய்யவேண்டும் என்பதே கொங்கு மக்களின் எதிர்பார்ப்பாகும்.

வியாழன், 7 ஜூன், 2012

அய்.பி.எல். ஆட்டம்! குத்தாட்டம்!! சூதாட்டம்...?



‘பதினோரு கோமாளிகள் விளையாட பதினோராயிரம் முட்டாள்கள் ரசிக்கிறார்கள்’ என்று கிரிக்கெட் விளையாட்டுப்பற்றி மிகச்சரியாக கணித்துக் கூறியவர் அறிஞர் பெர்னாட் ஷா. அவரின் கூற்று எந்தளவுக்கு உண்மை என்பது இந்தியாவில் மற்ற விளையாட்டுகளுக்கு ஏற்பட்டுவரும் நிலையை பார்த்தாலே புரியும்.

உலகளவில் அதிகமான மக்களால் ரசிக்கப்படுவதும், அதிக நாட்டினரால் விளையாடப்படுவதுமான கால்பந்தாட்டத்தில், இந்தியா இன்று வரை உலக கோப்பைப் போட்டியில் கலந்து கொள்ளும் தகுதிச் சுற்றுக்கே தகுதி பெற்றதில்லை என்கிற அவலம்.

ஒலிம்பிக் மற்றும் ஆசிய விளையாட்டுப் போட்டிகளில் பெயரறிய நாடுகளெல்லாம் பதக்கங்களை வாரிக்குவித்து அந்தந்த நாடுகளுக்கு பெருமை சேர்த்துக் கொண்டிருக்க இந்தியா மட்டும் ஒற்றைத் தங்கம் வாங்குவதற்கே தகிடுதத்தம் போடுகிற கேவலம்.

ஒரு காலகட்டத்தில் கொடிகட்டிப் பறந்த இந்தியாவின் தேசிய விளையாட்டு என்று வாயளவில் மட்டுமே சொல்லப்படுகிற ஹாக்கி இன்றைக்கு இருக்கும் இடம் தெரியாமல் தேய்ந்து போகும் பரிதாபகரம்.

இப்படி உலகின் பெரும்பாலான நாடுகளில் பெரும்பான்மை மக்களால் விளையாடப்படும் ஆரோக்கியமான அறிவுப்பூர்வமான எந்த விளையாட்டும் இந்தியாவில் வளர்ச்சி பெறவில்லை அல்லது வளர்க்கப்படவில்லை. அதற்குக் காரணம் என்ன என்று அறிவது மிக எளிதான ஒன்றுதான்.

இந்தியத் துணைக் கண்டத்தில் வாழும் பெரும்பாலான மக்கள் கொண்டாடும் விளையாட்டாக விளைவிக்கப்பட்டுள்ள கிரிக்கெட் மீதான மோகமும், அதனுடைய வளர்ச்சியும்தான் மற்ற எந்த விளையாட்டும் இங்கே எழுச்சி பெறாமல் போனதற்கான காரணம்.

இந்தியத் துணைக் கண்டம் பிரிட்டனின் ஆதிக்கத்திற்கு ஆட்பட்டிருந்தபோது அந்த நாட்டு பிரபுக்கள் தங்களது பொழுது போக்கிற்காக உருவாக்கப்பட்டதுதான் கிரிக்கெட் என்பது யாரும் மறுக்கமுடியாத உண்மை. இந்த மண்ணிற்கும் மக்களுக்கும் தொடர்பில்லாத இறக்குமதி செய்யப்பட்ட இந்த விளையாட்டு ஒட்டு மொத்த சமுதாயத்தையும் சீரழிக்கும் அவலம் இந்தியாவைத் தவிர வேறு எங்கும் கிடையாது.

இங்கிலாந்தின் காலனி ஆதிக்கத்திற்கு ஆட்பட்ட நாடுகளான இந்தியா, பாகிஸ்தான், பங்களாதேஷ், இலங்கை, தென்ஆப்ரிக்கா, ஆஸ்திரேலியா, ஜிம்பாவே, ஸ்காட்லாண்டு, கனடா, மேற்கத்திய தீவுகள், நியூசிலாந்து போன்ற நாடுகளில் மட்டும்தான் இன்றைக்கு இந்த மட்டைபந்து எனப்படும் கிரிக்கெட் விளையாடப்பட்டு அதிகப்படியாக ரசிக்கப்பட்டு வருகிறது.

குறிப்பாக இந்தியாவில்தான் இந்த கிரிக்கெட் பித்தர்கள் அதிகமாக இருக்கிறார்கள். கிரிக்கெட் பற்றி பேசினால் மேதாவிகள் என்கிற போக்கும் உருவாகி இருக்கிறது. இந்தியாவின் பல வீர விளையாட்டுகளை புறந்தள்ளிவிட்டு மக்களை இந்த கிரிக்கெட்டிற்குள் சுருட்டிய புண்ணியவான்கள் பார்ப்பனர்களைத் தவிர வேறுயாராக இருக்க முடியும்.

எப்பொழுதும் கடினப்படாமல் மற்றவர்களை ஏய்த்து பிழைப்பதையே தொழிலாகக் கொண்ட இந்த உச்சிகுடுமிகள் இங்கிலாந்து பிரபுக்களிடம் இருந்ததை இரவல் வாங்கி கிரிக்கெட்டில் கோலோச்சி விட்டனர். இந்தியாவில் கிரிக்கெட் புகழ் பெற்றது முதல் இன்று வரை அவர்களின் ஆதிக்கமே நிலைத்திருக்கிறது.

சுனில் கவாஸ்கர், ரவி சாஸ்திரி, வெங்சர்க்கார், ஸ்ரீகாந்த் என்று தொடங்கி சச்சிடெண்டுல்கர், கங்குலி, ராகுல் டிராவிட், கும்ப்ளே, சடகோபன் ரமேஷ் என்று கிரிக்கெட் பூணூல்களின் எண்ணிக்கைக் கூடிக்கொண்டே இருக்கிறது. 11 பேர் விளையாடும் கிரிக்கெட்டில் குறைந்தபட்சம் 8நபர்களாவது பார்ப்பனர்களாக இன்றைக்கும் இருக்கிறார்கள்.

ஏற்கெனவே ஊடகத்துறையை கையில் வைத்திருக்கும் பத்திரிகைப் பார்ப்பனர்கள் தங்களது இனஉணர்வின் காரணமாக கிரிக்கெட்டை புகழ்ந்து எழுதி, பேசி வருகின்றனர். அத்தோடு லாபம் ஒன்றையே நோக்கமாகக் கொண்ட வணிக நிறுவனங்களும் தங்கள் பொருள்களை மக்களின் தலையில் கட்ட இந்த விளையாட்டைப் பயன்படுத்திக் கொள்கின்றனர்.

சுமார் 60 நாடுகளில் விற்கவேண்டியப் பொருள்களை கிரிக்கெட் மூலமாக விளம்பரப் படுத்துவதன் மூலம் இந்தியாவில் விற்க முடியும் என்பதைப் புரிந்து கொண்ட பல பன்னாட்டு நிறுவனங்கள் இந்த விளையாட்டிற்கு ஸ்பான்சர் என்ற பெயரில் பணத்தை வாரியிறைக்கின்றன.

இந்தவரிசையில் மேலும் லாபத்தை ஈட்டும் ஒரே நோக்கத்தோடு, பல்லாயிரம் கோடிகளை சொத்தாகக் கொண்ட இந்திய கிரிக்கெட் வாரியத்தால் உருவாக்கப்பட்டதுதான் அய்பிஎல் கூ20 என்னும் சூதாட்டம். இந்த அய்பிஎல் என்பது முழுக்க முழுக்க வரி ஏய்ப்பு பெருமுதலாளி பெருச்சாளிகளை உள்ளடக்கியதாக இருக்கிறது. முகேஷ் அம்பானி, விஜய் மல்லையா, இந்தியா சிமெண்ட் சீனிவாசன் போன்ற தொழிலதிபர்களும், ஷாருக்கான், பிரித்தி ஜிந்தா, ஷில்பா ஷெட்டி போன்ற ஹிந்தி திரை நட்சத்திரங்கள். இப்படி இந்தியத் துணைக் கண்டத்தின் பெருமையை உலகிற்கு பறைசாற்ற கிளம்பும் சமூகப் போராளிகளின் எண்ணிக்கை கூடிக் கொணடே இருக்கிறது..!


கடந்த 2008 ஆம் ஆண்டு தொடங்கப்பட்ட இந்த டிவென்டி20 என்ற இருபது ஓவர் மட்டைபந்துப் போட்டி தற்பொழுது அய்ந்தாவது ஆண்டை முடித்து மற்ற போட்டிகளைக் கட்டிலும் அதிக கொள்ளையடித்துள்ளது இந்திய கேடுகெட்ட (மன்னிக்கவும்) கிரிக்கெட் வாரியம். இந்தப் போட்டியால் மட்டும் குறைந்தபட்சம் 20ஆயிரம் கோடி ரூபாயளவிற்கு சூதாட்டம் நடந்திருக்கும் என்பது பரவலான கருத்து.


ஏற்கனவே கிரிக்கெட் போட்டியில் இந்தியா-பாகிஸ்தான் அணிகள் மோதிக் கொள்ளும் போது (கவனிக்கவும் விளையாடும் போதல்ல) கோடிக்கணக்கான ரூபாய்க்கு சூதாட்டம் நடைபெற்று வந்தன. அந்த பெட்டிங்கையே மிஞ்சிவிடும் அளவுக்கு இந்த அய்பிஎல் சூதாட்டத்தில் தனித்த இடத்தை பெற்றிருக்கிறது.

இந்தப் போட்டிகளை நடத்துவதற்கான தொலைக்காட்சி உரிமம் கூட மிகப் பெரிய தொகைக்கு விலைபோயுள்ளது. இவற்றையெல்லாம் விட அய்பிஎல்லின் பக்கம் ரசிகர்களை கொண்டுவரவும் சியேர்ஸ் கேர்ள்ஸ் என்ற பெயரில் வெளிநாட்டுப் பெண்களை நாள் வாடகைக்குப் பிடித்து வந்து அரைகுறை ஆடையுடன் மைதானத்தில் ஆடவைத்த பெருமையை என்னவென்று சொல்வது.


குறிப்பாக இந்த ஆண்டுக்கான துவக்கவிழா கலைநிகழ்ச்சிகள் சேப்பாக்கம் மைதானத்தில் நடக்காமல் சென்னை ஒய்எம்சிஏ மைதானத்தில் நடைபெற்றது. கிரிக்கெட் மைதானத்தில் இரண்டு ஆட்டத்தையும் பார்க்கலாம் என்று காத்திருந்த ரசிகர்களுக்கு ஏமாற்றத்தை அளித்த கிரிக்கெட் வாரியம், கலைநிகழ்ச்சிகளை மட்டும் ஒய்எம்சிஏ மைதானத்தில் நடத்தியதன் வேறுஒன்றுமில்லை, அங்கேயும் ஒரு வசூல் வேட்டையை நடத்தத்தான்.

கிரிக்கெட் வாரியம் எதிர்பார்த்த மாதிரியே அய்பிஎல் துவக்கவிழா நிகழ்ச்சியைக் காண கலைபித்தர்கள் காசை வாரியிறைத்தனர் என்றுதான் சொல்லவேண்டும். கார்ப்பரேட் கம்பெனிகளின் கனவு நாயகன் அமிதாப் பச்சன், சல்மான் கான், பிரபுதேவா. கரீனா கபூர், பிரியங்கா சோப்ரா என்ற சினிமா பட்டாளங்களின் குத்தாட்டாங்களுடன் பாப் இசை பாடகி கேட்டி பெர்ரி சிறப்பு நடனத்தையும் ஆடினார். இவர்களுடன் ஆஸ்திரேலிய வீரர் போலிங்கர்  ஆடிய நடனம் மகா மட்டமானதாக இருந்தது.

இங்கே நம்முடைய கேள்வியெல்லாம் ஒன்றுதான். கோயில் திருவிழாக்களில் நடத்தப்படும் நடன நிகழ்ச்சிகளை ஆபாசம் என்று தடைபோடும் காவல்துறையோ நீதிமன்றமோ கார்ப்பரேட் அளவில் நடத்தப்படும் இதுபோன்ற ஆபாச கூத்துகளை எப்படி அனுமதிக்கறது என்பதுதான். ஏனென்றால், இந்த நிகழ்ச்சிகளைக் காண மற்றவர்களைவிட முண்டியடித்து முன்வரிசையில் அமர்ந்திருந்தவர்களில் பெரும்பாலானோர் அய்ஏஎஸ், அய்பிஎஸ், மற்றும் நீதித்துறை சார்ந்தவர்கள்தான்.


இதைவிட கொடுமை என்னவென்றால், மேடையில் ஆபாச கூத்துகள் அரங்கேறிக் கொண்டிருந்த வேளையில் அதன் தாக்கம் கீழே ரசிகர்கள் நடுவேயும் கிளம்பி பப்புகள், டிஸ்கோத்தேகள் எல்லாம் தோற்றுப் போகுமளவுக் ஆட்டம் போட துவங்கிகினர். எல்லைமீறிப்போன இந்த கூத்துகளை அனைத்து ஊடகங்களும் படம் பிடித்துக் கொண்டிருந்தன. அங்கிருந்த காவலர்களோ நிகழ்ச்சி ஏற்பாட்டாளர்களோ ரசிகர்களின் கொண்டாட்டத்தை கட்டுபடுத்தாமல் அவர்களும் ரதிக்கு கொண்டிருந்தனர் என்பதுதான் கொடுமையிலும் கொடுமை. 

அடுத்தாக ஒவ்வொருவருக்கிடையேயும் பரந்து விரிந்திருக்கிற சூதாட்டம், வெற்றி தோல்வியை நிருணயிக்க வீரர்களிடையே நடைபெற்ற பேரங்கள், வெற்றியை விட்டுகொடுக்க அணிகளுக்கு கைமாற்றப்பட்ட தொகைகள், மசியாத வீரர்களுக்கு சீயேர்ஸ் பெண்களுடன் விருந்து என ஆபாசங்களும் அருவருக்கத்தக்கதுமானதாகத்தான் நடந்து முடிந்திருக்கிறது அய்பிஎல்.
  
ஆக, இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியம் மற்றும் இந்தியன் பிரீமியர் லீக் குழுவின் கொள்கையெல்லாம் ஒன்றே ஒன்றுதான், எதைகாட்டியாவது ரசிகர்களிடம் பணம் பிடுங்கவேண்டும், விருவிருப்பை கூட்டவேண்டும் என்பதற்காக வீரர்களை எப்படியாவது மடக்குவது அதன்மூலம் கோடிகளை சுருட்டுவது. இவைதவிர கிரிக்கெட் வாரியத்திற்கு என்ன கொள்கை இருக்க முடியும்.

இப்படி அய்பிஎல் போட்டியின் மூலம் பல்லாயிரம் கோடி ரூபாய் லாபம் கிடைப்பதால், இதில் அரசியல்வாதிகள் தற்போது பினாமி பெயர்களில் நுழைவது அதிகரித்துள்ளது. இந்தியாவில் கிரிக்கெட் ஆட்டத்துக்கு பெருவாரியான ரசிகர்கள் இருக்கிறார்கள் என்கின்ற ஒன்றை மட்டுமே முதலீடாக வைத்து, எந்த உழைப்பும் இல்லாமலேயே ஒரு கூட்டம் மிக எளிதாக, பல ஆயிரம் கோடி ரூபாயை சம்பாதிக்கும் என்றால் அதை இந்திய அரசு வெறுமனே பார்த்துக் கொண்டிருக்கும் என்றால் இதன் பின்னணி என்ன?

லாட்டரி டிக்கெட்டை ஒழித்து விட்டோம், சூதாட்டத்தை மக்கள் நலன் கருதித் தடை செய்து விட்டோம் என்று கூறும் அரசு, அந்த லாட்டரி சூதாட்டத்தைவிட மிகமோசமானதாக மாறிவரும் கிரிக்கெட்டிற்கு கட்டுப்பாடுகளை விதிப்பதற்கோ அல்லது கிரிக்கெட் வாரியத்தை அரசு ஏற்று நடத்துவதற்கோ தயங்குவதேன்? ஆட்சியாளர்களுக்கும் மறைமுகமாக பங்கு போகிறதா என்கிற கேள்வி எழவே செய்கிறது.

ஏழைகள் நிறைந்த பணக்கார நாடு என இந்தியாவைப் பற்றிக் குறிப்பிடுவதுண்டு. இந்திய கிரிக்கெட் அதை அய்பிஎல் ஏலம் மூலம் நிரூபித்துக் கொண்டிருக்கிறது. இந்த வேளையில் இந்தியாவின் தேசிய விளையாட்டான ஹாக்கி அணியின் நிலையைப் பார்க்கும்போது வேதனையே ஏற்படுகிறது. இரண்டு ஆண்டிற்கு முன்னால் சம்பள பாக்கி, சிறப்பாக விளையாடியதற்கான ஊக்கத்தொகை உள்பட தலா நான்கரை லட்சம் ரூபாய் தரக் கோரி இந்திய ஹாக்கி அணியில் இடம்பெற்றுள்ள 22 பேரும் போராட்டம் நடத்தும் சூழலுக்குத் தள்ளப்பட்டனர்.


அந்த 22பேருக்குமாக சேர்த்து மொத்தமே 1கோடி ரூபாய்தான். அதுகூட கைவசம் இல்லாமல் தவித்தது இந்திய ஹாக்கி சங்கம். பின்னர், அணியின் ஸ்பான்சரான சகாரா நிறுவனம் தந்த நிதியை வைத்து பிரச்னையைச் சமாளித்தது. தேசிய விளையாட்டுக்கு ஏற்பட்ட தேசிய அவமானம் இது.

ஆனால், கிரிக்கெட்டைப் பொறுத்தவரை ஆண்டுக்கு 50 லட்சங்கள் வரை காண்ட்ராக்ட் பேசப்பட்டு கோடியில் புரளும் கிரிக்கெட் வீரர்கள் என்ற இந்த சூதாடிகள், அய்பிஎல் விளையாட்டின் மூலம் கோடிகளை அள்ளிச் செல்கின்றனர். இவைதவிர விளம்பரப் படங்களிலும் கோடிக்கணக்கில் சம்பாதித்துக் கொண்டிருக்கின்றனர்.

இந்தியாவில் மற்ற விளையாட்டுகள் வறட்சியில் வாடும்போது கிரிக்கெட்டுக்கு மட்டும் ஏன் இந்தப் பணமழை. ஒரு நாட்டின் வளர்ச்சி என்பது சமச்சீராக இருக்க வேண்டும். விளையாட்டுக்கும் அது பொருந்தும். இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியத்தை இந்திய அரசே ஏற்று, கிரிக்கெட்டால் கிடைக்கும் பணத்தை மற்ற விளையாட்டுகளை மேம்படுத்தப் பயன்படுத்தினால் என்ன? என்பதே நம் கேள்வி.

கிரிக்கெட் இந்திய விளையாட்டு அல்ல; இங்கிலாந்தில் இருந்து இறக்குமதியான விளையாட்டுக்குக் கொடுக்கப்படும் முக்கியத்துவம் இந்திய பாரம்பரிய விளையாட்டுகளுக்கு இல்லாதது அவமானகரமானது.

இந்திய கிரிக்கெட் அணி ஏதாவது ஒரு கோப்பையை வென்றுவிட்டால் நாடாளுமன்றம் பாராட்டுகிறது. குடியரசுத் தலைவர், தலைமை அமைச்சர், நடுவன் அமைச்சர்கள் வாழ்த்துச் செய்தி அனுப்புகின்றனர். ஊடகங்கள் தலைப்புச் செய்தியாக வெளியிட்டு புளகாங்கிதம் அடைகின்றன. 

கிரிக்கெட்டை போலவே மற்ற விளையாட்டுகளுக்கும் ஆதரவு தாருங்கள் என நாடாளுமன்றமோ, குடியரசுத் தலைவரோ, தலைமை அமைச்சரோ சொல்வதில்லையே ஏன்..? சம்பளபாக்கி கேட்கிறது ஹாக்கி; கோடிகளில் கொழிக்கிறது கிரிக்கெட். இந்தியாவின் பார்ப்பனர், பார்ப்பனர் அல்லாதார் என்ற ஜாதிய ஒடுக்குமுறை போலவே இதுவும் இந்திய விளையாட்டின் இருமுகங்கள் என்பதை மக்கள் உணர்ந்து அபினைவிட மிக ஆபத்தான கிரிக்கெட்டை ரசிப்பதை விட்டுவிட்டு மற்ற விளையாட்டுகளை ஊக்கப்படுத்த முயல வேண்டும்.

கிரிக்கெட்டிற்கு போதிய ரசிகர்கள் இல்லையென்றால் கார்ப்பரேட் நிறுவனங்களும், ஊடகங்களும் தங்களது பார்வையை மற்ற விளையாட்டுகளில் செலுத்தும். அரசுகள் கூட மற்ற விளையாட்டுகளை ஊக்கப்படுத்தும வகையில் நிதிகளை ஒதுக்க முயலும். இவையெல்லாம் நடைமுறைப்படுத்த மக்களின் மாற்றத்தால் மட்டுமே சரிப்படும் என்பது என் கருத்து. உங்களுக்கு எப்படி...-?

புதன், 6 ஜூன், 2012

அரசுப் பள்ளிகளின் அவலநிலை அலட்சியத்தில் கல்வித் துறை




அண்மைக்காலமாக தமிழ்நாடு முழுவதிலும் தனியார் பள்ளியின் மீதான மோகமும், அவற்றில் சேரும் மாணவர்களின் எண்ணிக்கையும் நாளுக்குநாள் அதிகரித்து வருகிறது. தனியார் பள்ளியில் சேர்ந்த 6முதல் -14வயதிற்கு உள்பட்ட குழந்தைகளின் எண்ணிக்கை 2005-ஆம் ஆண்டில் 16.4 விழுக்காடாக இருந்தது. அதுவே 2008-ஆம் ஆண்டில் அது 22.5 விழுக்காடாக உயர்ந்துள்ளது. தனியார் பள்ளிகளும் 2004 - 05-ஆம் ஆண்டில் 11.15 சதவிகிதமாக இருந்தது 2006 - 07-ஆம் ஆண்டில் 18.86 விழுக்காடாக உயர்ந்துள்ளது என்பது கவனிக்கப்பட வேண்டிய ஒன்று. தனியார் பள்ளிகளும் அதில் பயிலும் மாணவர்களும் இவ்வாறு அதிகப்பதற்கு ஒரு முதன்மையான காரணம் மக்கள் மதிப்பீட்டில் தனியார் பள்ளிகள் உயர்ந்தவை என்கிற கருத்து உருவாகியிருப்பதுதான்.


தங்கள் குழந்தைகள் தரமான கல்வி கற்க வேண்டும் என்பதில் தமிழ்நாட்டு பெற்றோர்கள் அக்கறை காட்டுகிறார்கள். அவர்களது எண்ணப்படி, அரசுப் பள்ளிகளைவிட தனியார் பள்ளிகள்தான் சிறந்தவை. அதைத் தவிர உலகமயமாதலின் தாக்கத்தால் தங்களது குழந்தைகளுக்கு ஆங்கில வழிக்கல்வியும் அவசியம் என்று கருதுகிறார்கள். இக்காரணங்களினால் தனியார் பள்ளிகளுக்கு சமுதாயத்தில் ஓரளவு வாய்ப்பும் வசதியும் உள்ளவர்களிடையே பெரும் ஆதரவு ஏற்பட்டுள்ளது. இதன் தாக்கத்தை ஏழை எளிய குடும்பங்களிலும் காணமுடிகிறது.


அரசுப் பள்ளியில் பணியாற்றும் ஆசியர்கள் முறையான கல்வித் தகுதி பெற்றவர்கள். அதைத் தவிர கற்பிக்கும் பயிற்சி பெற்றவர்கள். அரசுப் பள்ளிகளில் கல்விக் கட்டணம் ஏதும் கிடையாது. இலவச மதிய உணவு, இலவச சீருடை, இலவச நோட்டுப் புத்தகங்கள் இவையெல்லாம் வழங்கப்படுகின்றன. இருந்தபோதிலும், ஏழை பெற்றோர்கள்கூட ஏன் இவற்றை யெல்லாம் விட்டுவிட்டு தனியார் பள்ளியில் அதிக கட்டணம் செலுத்தி தங்கள் குழந்தைகளைச் சேர்க்க விரும்புகிறார்கள்? இதைத் தீவிரமாக ஆராய வேண்டும்.




இந்தக் கருத்து உருவானதற்கு அரசின் கல்விக் கொள்கைகள் ஒரு மோசமான நிலையில் இருப்பதுதான் என்று சொல்லத் தேவையில்லை. உண்மையிலேயே பெரும்பாலான தனியார் பள்ளிகள் சில ஆண்டுகளுக்கு முன் கொடிய தீ விபத்து நிகழ்ந்த, கும்பகோணம் பள்ளியைப் போல்தான் உள்ளன. ஆனால் பொதுமக்கள் மத்தியில் எந்தவித அடிப்படை வசதியும் இல்லையென்றாலும் தனியார் பள்ளிகள் என்றாலே அவை உயர்ந்தவை. அனைத்து அரசு பள்ளிகளும் தரம் குறைந்தவை’ என்ற ஒரு கருத்து நிலவி வருகிறது. உண்மையில் ஒருசில தனியார் பள்ளிகள்தான் சிறந்த முறையில் இயங்குகின்றன. அவை மொத்தத்தில் 10 விழுக்காட்டிற்கும் குறைவாகவே இருக்கும்.


2007-ம் ஆண்டில் தமிழ்நாடு அரசு வெளியிடப்பட்டுள்ள தகவலின்படி தமிழ்நாட்டில் 1 முதல் 5 வகுப்பு வரையுள்ள துவக்கப் பள்ளிகளின் மொத்த எண்ணிக்கை 34,342. இவற்றில் 24,310 பள்ளிகள் அரசுப் பள்ளிகள். அரசு உதவி பெறும் பள்ளிகள் 5,037. அரசு உதவி பெறாத தனியார் பள்ளிகள் 4,995. அதேபோல் நடுநிலைப் பள்ளிகளின் மொத்த எண்ணிக்கை 8,718. இவற்றில் 6,487 அரசுப் பள்ளிகள். அரசு உதவி பெறும் தனியார் பள்ளிகள் 1,679. அரசு உதவி பெறாத தனியார் பள்ளிகள் எண்ணிக்கை வெறும் 552தான். மொத்தமாகப் பார்த்தால் துவக்கக் கல்வி நிலையில் அரசு உதவி பெறாத தனியார் பள்ளிகளின் எண்ணிக்கை சுமார் 13 சதவிகிதம்தான். அவற்றில் பயிலும் குழந்தைகளின் எண்ணிக்கையும் இதே அளவில்தான் உள்ளது.




ஆக 80 விழுக்காட்டிற்கும் அதிகமான குழந்தைகள் அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில்தான் படிக்கிறார்கள். இப்படி பெரும்பான்மை மக்களின் கல்வி வளர்ச்சியில் கவனம் செலுத்தாமல் தனியார் பள்ளிகளை ஊக்கப்படுத்துவதிலும், அதற்கான பாதுகாப்பை வழங்குவதிலுமே அரசு செயல்படுகிறது. அரசுப் பள்ளிகளை மேம்படுத்துவதற்கான எந்த திட்டமும், நடவடிக்கையும் மேற்கொள்வதாகத் தெரியவில்லை. பல அரசுப் பள்ளிகளும் அடிப்படை வசதிகள் இல்லாமல் பள்ளிக் கட்டடங்கள் இல்லாமல் கேடுகெட்ட நிலையில் இருக்கின்றன.


குறிப்பாக கழிவறை வசதியோ சுகாதாரமான குடிநீரோ பெரும்பாலான அரசுப் பள்ளிகளில் கிடையாது. அதிலும் பெண்கள் அதிகம் படிக்கும் பள்ளிகளில்கூட இந்த வசதிகள் இல்லை என்பது அவலத்திலும் அவலம்.


அரசின் இந்த அலட்சியப் போக்கின் காரணமாகவும் ஆங்கிலப் பள்ளிகளின் மீது ஏற்பட்டுள்ள மோகத்தின் காரணமாகவும் அரசுப் பள்ளிகளில் சேரும் மாணவர்களின் எண்ணிக்கை படிப்படியாக குறைந்து பள்ளிகளை மூட வேண்டிய அவலநிலை ஏற்பட்டுள்ளது. இதற்கு ஒரு எடுத்துக்காட்டு திருத்தணியை அடுத்த குப்பம்கண்டிகை கிராம தொடக்கப் பள்ளி.


இப் பள்ளியில் கடந்த ஆண்டுகளில் 150-க்கும் மேற்பட்ட மாணவர்கள் படித்து வந்தனர். ஆனால் தற்போது 1-ம் வகுப்பு முதல் 5-ம் வகுப்பு வரை 32 மாணவர்கள் மட்டுமே படித்து வருகின்றனர். பெரும்பாலான கிராமங்களில் உள்ள ஓராசிரியர் மற்றும் ஈராசிரியர் பள்ளிகளின் நிலை இப்படித்தான் இருக்கிறது.


இதேநிலைதான் தமிழ்நாட்டின் தலைநகரான சென்னையின் மாநகராட்சிப் பள்ளிகளுக்கும் ஏற்பட்டுள்ளது. எந்தத் தனியார் பள்ளி நிர்வாகத்துக்கும் கிடைக்காத நிதி வசதி சென்னை மாநகராட்சிக்கு இருக்கிறது. சென்னை மாநகராட்சி தற்போது ஒவ்வோரு ஆண்டும் சுமார் 70 கோடி ரூபாய் துவக்கக் கல்வி வரியாக, சொத்துவரி செலுத்துபவடமிருந்து வசூலிக்கிறது. அவ்வாறு வசூலித்தத் தொகையை முழுவதும் செலவழிக்கப்படாமல் கையிருப்பில் உள்ள தொகை சுமார் 100கோடி ரூபாயைத் தாண்டும்.


சென்னை மாநகராட்சி 300 பள்ளிகளை நிர்வகித்து வருகிறது. இதில் சுமார் 250 பள்ளிகள் துவக்க நடுநிலைப் பள்ளிகள்தான். தற்போது மாநகராட்சி கையிருப்பில் உள்ள தொகையைக் கொண்டு 300 பள்ளிகளிலும் தலா 40லட்சம் ரூபாய் வீதம் உள்கட்டமைப்பு வசதிக்காக உடனடியாகச் செலவழிக்கலாம். அதைத்தவிர வசூலிக்கும் துவக்கக் கல்விவரியைக் கொண்டு ஒவ்வோரு ஆண்டும், ஒவ்வொரு பள்ளிக்கும் 20லட்சம் ரூபாயை செலவு செய்யலாம். இவ்வாறு செய்தால் எந்தத் தனியார் பள்ளியிலும் கிடைக்காத வசதிகளை மாநகராட்சிப் பள்ளிகளில் செய்து கொடுக்க முடியும். ஆனால், மாநகராட்சி இன்றுவரை இதைச் செய்ய முன்வரவில்லை என்பதுதான் வருந்தக்கூடிய விடயம்.


அதைவிட கொடுமையான விடயம் கடந்த ஆண்டு சென்னை மாநகராட்சி பள்ளிகளில் போதிய மாணவர்கள் சேரவில்லையென்று, 30 பள்ளிகளை தமிழக அரசு மூடியுள்ளது. போதிய மாணவர்கள் சேரவில்லையென்பது, எவ்வளவு பெரிய பொய் என்பது பின்வரும் செய்தி சொல்லும்.


கும்மிடிப்பூண்டி அரசு மேல்நிலைப் பள்ளியில் 2,500 மாணவர்கள் படிக்கின்றனர். ஆனால், மொத்த ஆசிரியர்களின் எண்ணிக்கையோ, வெறும் 8 பேர்கள்தான். அதாவது, 300மாணவர்களுக்கு ஒரே ஒரு ஆசிரியர்தான் இருக்கிறார். இதனால்தான் மாணவர் சேர்க்கை குறைந்தது. இதுஅப்பள்ளியில், போதிய ஆசிரியர்கள் இல்லாததால், மாணவர் சேர்க்கையையே நிறுத்திவிட்டனர். அரசுப் பள்ளிகளை மூடுவதற்கு போதிய மாணவர்கள் சேராதது காரணமா? அல்லது ‘அரசு பள்ளிகளை மூடவேண்டும்’ என்பது அரசின் கொள்கை காரணமா? என்பது விளங்க முடியா விடுகதையாக இருக்கிறது.


மாநகராட்சி பள்ளிகளின் மூடல் பற்றி மாமன்ற உறுப்பினர்களோ அல்லது வரி செலுத்தும் குடிமக்களோ ஏன்? என்று மாநகராட்சியை எந்த கேள்வியும் கேட்பதேயில்லை. இந்தநிலை சென்னையில் மட்டுமல்ல, தமிழகத்தில் உள்ள அனைத்து நகராட்சிகளிலும் நடந்து வருகிறது. கோயம்புத்தூர், மதுரை, திருச்சி, சேலம், திருநெல்வேலி ஆகிய அய்ந்து மாநகராட்சிகளில் கையிருப்பில் இருக்கும் துவக்கக் கல்விவரி நிதி தலா ரூ. 53.57 கோடியாகும். இவற்றை பள்ளிகளின் மேம்பாட்டிற்கு உள்கட்டமைப்பிற்கு பயன்படுத்தாமல் பாதுகாத்துக் கொண்டிருக் கின்றனர். எதற்கு என்றுதான் இன்னும் விளங்க முடியா விடுகதையாக இருக்கிறது.


இந்தநிலை திடீரென்று ஏற்பட்டதல்ல. மாநகராட்சி, கல்வித்துறை, ஆசியர்கள், வரிசெலுத்தும் குடிமக்கள் ஆகியோர் பல ஆண்டுகளாகக் காட்டிய அக்கறையின்மை காரணமாக வந்த விளைவுதான் இது. திருநெல்வேலி மாநகராட்சியில், மாநகராட்சியின் மையப்பகுதியில் - நெல்லை சந்திப்பு பேருந்து நிலையத்திலிருந்து சுமார் 250 மிட்டர் தொலைவில் - உள்ள மாநகராட்சி சிந்துபூந்துறை நடுநிலைப் பள்ளியில் 8வகுப்புகளுக்கும் சேர்ந்து 6மாணவர்களும் ஓர் ஆசிரியையும் இருக்கிறார்கள். ஏறத்தாழ ஓர் ஏக்கர் நிலப்பரப்பில் இந்தப் பள்ளி இருக்கிறது. ஒரு காலத்தில் 400 - 500 மாணவர்கள் படித்த பள்ளிதான் இந்த நிலைக்கு வந்திருக்கிறது.


இந்தப் பள்ளிக்கு எதிரிலேயே அண்மையில் தொடங்கப்பட்ட தனியார் பள்ளியில் பல மாணவர்கள் படிக்கிறார்கள். இந்த மாநகராட்சிப் பள்ளியை இடித்து அங்கு ஒரு திருமண மண்டபம் கட்டுவதற்கான ஆலோசனையும் பரிசீலிக்கப்பட்டது. ஏற்கனவே சென்னை தியாகராயர் நகர் ஜி.என். செட்டி சாலையில் இருந்த ஒரு மாநகராட்சிப் பள்ளியை இடித்துவிட்டுத்தான் அங்கு பிட்டி தியாகராயர் கலையரங்கம் கட்டப் பட்டுள்ளது. மேற்குறிப்பிட்ட அவலநிலை தமிழ்நாட்டில் கடந்த 20 - 25 ஆண்டுகளாக நடைபெற்று வருகிறது.


கல்வி வளர்ச்சியில் அரசு தகுந்த அக்கறை காட்டவில்லை என்பது ஒருபுறம் இருக்க அரசுப் பள்ளிகளில் பணியாற்றும் ஆசிரியப் பெருமக்களோ சற்றேனும் சமூக அக்கறையோடு செயல்படுவதாகத் தெரியவில்லை. தங்களது பணிப்பாதுகாப்பு, சம்பளம் ஆகியவற்றில் காட்டும் அக்கறையை கல்வி வளர்ச்சியில் காட்டுவதில்லை. அரசுப் பள்ளிகளின் ஆசிரியர்கள் இன்றைக்கு 30ஆயிரம், 40ஆயிரம் என்று ஊதியம் பெற்றுக் கொண்டு தங்களது பிள்ளைகளை தனியார் பள்ளிகளில் படிப்பதற்கு அனுப்பிவிடுகின்றனர். அதாவது ஊதியம் வாங்குவதற்கு அரசுப் பள்ளி என்றும் தன்பிள்ளைகள் படிப்பதற்கு மெட்ரிக்குலேசன் பள்ளிகள் என்றும் சுயநலப் போக்கோடு செயல்படுகிறார்கள். தாங்கள் பணியாற்றும் பள்ளிகளிலேயே தங்கள் குழந்தைகளை படிக்க வைக்க விரும்பாத ஆசிரியர்களைப் பார்த்துதான் மற்ற பெற்றோர்களும் தங்களது பிள்ளைகளை தனியார் பள்ளிக்கு அனுப்ப முற்படுகின்றனர்.


இதுபோன்ற பல பிரச்சனைகள் அரசுப் பள்ளிகளில் கோலோச்சிக் கொண்டிருக்கும் சூழ்நிலையில் செயல்வழிக் கற்றல், சமச்சீர் கல்வி போன்றவற்றை அரசு கொண்டு வருகிறது. இவற்றை நடைமுறைப்படுத்த வேண்டியது காலத்தின் கட்டாயம் என்றாலும் அதற்கு முன்னதாக தமிழ்நாடு அரசு தனது கல்விக் கொள்கையை சீரிய முறையில் உருவாக்க வேண்டியது அவசியமாகிறது.




தமிழ்நாட்டில் ஆரம்பப் பள்ளியைப் பொறுத்தமட்டில் கிராம ஊராட்சிக்கு அதற்கான பொறுப்பும், உரிமையும் அளிக்கப்பட வேண்டும். ஆசியர்களும் தங்களது தகுதி, பயிற்சி, ஊதியம் ஆகியவற்றுக்கு ஏற்ப அர்ப்பணிப்பு உணர்வுடன் பணியாற்ற வேண்டும். கல்வித்துறை அரசுப் பள்ளியை புகழ்பெற்ற தனியார் பள்ளிகளுக்கு இணையான தரத்துக்குக் கொண்டு வருவதைப் பற்றி சிந்தித்து சீரிய முயற்சிகளை எடுக்க வேண்டும். இவை அனைத்துக்கும் மேலாக அந்தந்தப் பகுதியிலுள்ள படித்தவர்கள் தத்தம் பகுதியில் உள்ள அரசு மற்றும் நகராட்சி, மாநகராட்சி, ஊராட்சி ஒன்றிய பள்ளிகள் இயங்குவது பற்றி ஆர்வமும் அக்கறையும் எடுத்துக்கொள்ள வேண்டும்.




அப்பொழுதுதான் கல்வி என்பது அனைத்து மக்களுக்கும் சீரான முறையில் சென்றடையும் என்பதே அனைவரின் எதிர்பார்ப்பு.

செவ்வாய், 5 ஜூன், 2012

பெட்ரோல்: எரியும் மக்கள் கொழிக்கும் நிறுவனங்கள்



மன்மோகன் தலைமையிலான ஐக்கிய முற்போக்கு கூட்டணி அரசு நடத்தி வரும் பெட்ரோல் விலையேற்ற நாடகம் நாளுக்கு நாள் அத்துமீறல்களுடன் அரங்கேறிவருகிறது. கடந்த 2 ஆண்டுகளில் மட்டும் 13 முறைக்கு மேல் பெட்ரோல் விலையை ஏற்றி சர்வதேச நாடுகளையே வியப்படைய செய்திருக்கிறது.
மன்மோகன் பெட்ரோல் பொருட்களின் மீதான விலையேற்றம் செய்வதற்கான காரணம், சர்வதேச சந்தையில் ஏற்பட்டுவரும் விலையேற்றத்தால் இந்தியாவில் இயங்கி வரும் எண்ணெளிணி நிறுவனங்கள் கடுமையான நட்டத்தை சந்தித்து வருகிறது என்பதுதான். அதனால் எப்பொழுதும் இல்லாத வகையில் கடந்த சில நாட்களுக்கு முன் லிட்டருக்கு 7 ரூபாய் 50 காசு என்றளவில் பெட்ரோல் விலையை உயர்த்தி மக்களின் வயிற்றெரிச்சலை வாங்கிக் கட்டிக் கொண்டார். இதனால் கூட்டணிக் கட்சிகள், எதிர்க்கட்சிகள் என்றில்லாமல் மக்களும் தன்னிச்சையாக போராட தொடங்கினர். இந்நிலையில் தமிழ்நாடு முழுக்க கிட்டத்தட்ட ஒருவாரம் கடுமையான பெட்ரோல், டீசல் தட்டுப்பாடு ஏற்பட்டது. மக்களின் போராட்டத்தை ஒடுக்க எண்ணெய் நிறுவனங்கள் மேற்கொண்ட சதி என்றும் கருத்து நிலவுகிறது.

ஏனென்றால் விலையேற்றத்திற்கு எதிராக போராடும் மக்களை திசை திருப்ப செயற்கையான தட்டுப்பாட்டை ஏற்படுத்தினால் பெட்ரோல் கிடைத்தால் போதும் என்கிற மனநிலைக்கு வந்துவிடுவார்கள் என்று எதிர்பார்த்தேதான் எண்ணெய் நிறுவனங்கள் செயல்பட்டன. இந்தத் தட்டுபாட்டின் காரணமாக பல இடங்களில் ஒரு லிட்டர் பெட்ரோல் 100ரூபாய் அளவிற்கு விற்கப்பட்டது.

பின்னர், ஏற்றிய விலையிலிருந்து இரண்டு ரூபாய் குறைப்பதாக மத்திய அரசு அறிவித்துவிட்டது. அமெரிக்க சிந்தனையோடு பொருளாதார திட்டங்களை தீட்டி மக்களை சுரண்டி வரும் நவீன பெருச்சாலியான மன்மோகன் அரசின் இந்த கண்துடைப்பு நாடகத்தை மேலோட்டமாக இல்லாமல் ஆழ்ந்து ஊற்று கவனிக்க வேண் டியது அவசியமாகிறது.

உண்மையில் இந்திய எண்ணெய் நிறுவனங்கள் நட்டத்தை சந்திக்கின்றனவா என்றால் இல்லை. கடந்த 2010&11 நிதியாண்டின் இரண்டாவது காலாண்டு நிதி நிலை அறிக்கையில் எண்ணெய் நிறுவனங்கள் வெளியிட்ட கணக்கின்படி ஐ.ஓ.சி. 5294 கோடியும் ஹெச்.பி.சி.ஐ. 2142 கோடியும், பி.பி.சி.எல். 2148 கோடியும் லாபம் ஈட்டியுள்ளன.


லாபத்தில் கிடைக்கும் வரியாக மட்டும் இந்நிறுவனங்கள் அரசுக்கு 2340 கோடியை செலுத்தியுள்ளன. ஆக ஒரு நிறுவனம் சராசரியாக வருடத்திற்கு பத்தாயிரம் கோடிக்கு மேல் லாபம் சம்பாதிக்கிறது. ஆனால் மத்திய அரசோ எண்ணெய் நிறுவனங்களுக்கு ஆயிரக்கணக்கான கோடி நஷ்டம் என்று கூறுகிறது. இது எவ்வளவு பெரிய மோசடி!
ஒரு வியாபாரி ஒரு பொருளை ஆயிரம் ரூபாய்க்கு வாங்கி பத்தாயிரம் ரூபாய்க்கு விற்பதற்கு தீர்மானித்திருக்கிறார் என்று வைத்துக்கொள்வோம்.
ஆனால், அந்தப் பொருன் இரண்டாயிரம் ரூபாய்க்குத்தான் விற்பனையாகிறது. உடனே அந்த வியாபாரி தனக்கு எட்டாயிரம் ரூபாய் நஷ்டம் ஏற்பட்டு விட்டதாக புலம்புகிறார். இந்த அடிப்படையில்தான் மத்திய அரசு நஷ்டம் நஷ்டம் என்று அலறுகிறது.

எண்ணெய் நிறுவனங்களுக்கு இழப்பு என்று ஒப்பாரி பாடும் நடுவண் அரசுக்கு பெட்ரோலிய பொருட்களுக்கு விதிக்கும் வரிகள் மூலமாக மட்டும் கோடி கோடியாய் குவிகிறது. சுங்கவரி, கலால்வரி, விற்பனை வரி, செஸ்வரி என்று பல் முனைவரிகளின் மூலமாக ஆண்டுக்கு ஓரு லட்சம் கோடிக்கு மேல் மத்திய அரசுக்கு வருமானம் வருகிறது. இதைத்தவிர மாநில அரசுகள் விதிக்கும் வரிகள் மூலமாக மாநில அரசுகளின் கஜானாவிற்கு ஆயிரக்கணக்கான கோடிகள் சென்று சேருகின்றன.

உலக மார்க்கெட்டில் பேரல் ஒன்றுக்கு 115 டாலர் என்ற அளவில் கச்சா எண்ணெயின் விலை இருக்கிறது. 115 டாலரை இந்திய ரூபாயின் மதிப்பில் கணக்கிட்டால் ரூ.6325 ஆகிறது. ஒரு பேரலுக்கு 160 லிட்டர். ஆக ஒரு லிட்டர் கச்சா எண்ணெயின் அடக்க விலை ரூ.40 ஆகிறது. உற்பத்தி செலவு, லாபம் இவற்றை வைத்துக் கணக்கிட்டால் 1 லிட்டர் ரூ.45ஐ தாண்டாது. ஆனால் அரசு விதிக்கும் வரியின் காரணமாக 1 லிட்டர் பெட்ரோலுக்கு 75.50 ரூபாய் கொடுத்து வாங்க வேண்டியிருக்கிறது.

டூ வீலரின் மூலம் வேலைக்குச் செல்லும் ஒரு நபர் மாதம் ஒன்றுக்கு 15 லிட்டர் பெட்ரோல் போடுகிறார் என்றால் அவர் செலவு செய்யும் தொகை ரூ.1132. இதில் அரசுக்கு வரியாக மட்டும் போகும் தொகை ரூ.532. அதாவது 600 ரூபாய் செலவில் முடிய வேண்டிய பெட்ரோல் செலவு அரசின் வரிவிதிப்பால் அவர் ரூ.1,132 செலவிட வேண்டியிருக்கிறது.
இந்த விஷயத்தில் அமெரிக்கா, பாகிஸ்தான், வங்காளதேசம், நேபாளம் போன்ற நாடுகளின் மக்கள் கொடுத்து வைத்தவர்கள். இந்நாடுகளில் பெட்ரோல் விலை முறையே ரூ.36, ரூ-.26, ரூ.32, ரூ.34 என்ற அளவில் தான் உள்ளது. ஆனால் நமது ஆட்சியாளர்கள் மக்கள் மீது பெரும்பாரத்தை அல்ல, பாறாங்கல்லையே சுமத்தி இருக்கிறார்கள்.

நம் நாட்டிலிருந்து பெட்ரோலியத்தை இறக்குமதி செய்யும் இலங்கையில் கூட ரூ.50க்குத்தான் பெட்ரோல் விற்கப்படுகிறது என்பது குறிப்பிடத்தக்கது.
இந்தியாவில் ரிலையன்ஸ், எஸ்ஸார், ஷெல் போன்ற நிறுவனங்கள் பெட்ரோலிய பொருட்களை தயாரித்து விற்கும் பணியில் ஈடுபட்டிருக்கின்றன.

இந்தியாவில் 18 கச்சா எண்ணெளிணி சுத்திகரிப்பு ஆலைகள் உள்ளன. இவற்றில் 17 ஆலைகள் பொதுத்துறை நிறுவனங்கள் வசம் உள்ளது. ஒரு ஆலைதான் தனியார் நிறுவனம் வசம் உள்ளது. அதாவது ரிலையன்ஸ் வசம் உஷீமீளது. மகாராஷ்டிராவில் உள்ள பன்னா முக்தா எண்ணெளிணி வயலும், ஆந்திராவில் உள்ள கோதாவரி எரிவாயு கிணறும் ரிலையன்சின் வசம் உள்ளது குறிப்பிடத்தக்கது.

17 பொதுத்துறை நிறுவனங்களின் சுத்திரிப்பு திறன் 74% என்ற அளவில் உள்ளது. ரிலையன்ஸ் நிறுவனத்தின் சுத்திகரிப்புத் திறனோ 26% என்ற அளவில் உள்ளது. இந்நிறுவனம் செய்யும் ஏற்றுமதியின் அளவைக் கேட்டால் மலைத்துப் போய் விடுவீர்கள். 60% சதவீத சுத்திகரிக்கப்பட்ட பெட்ரோலிய பொருட்களை ரிலையன்ஸ் ஏற்றுமதி செளிணிது கொண்டிருக்கிறது.

மத்திய அரசு பொதுத் துறை நிறுவனங்களுக்கு 100 டாலருக்கு கச்சா எண்ணெய் இறக்குமதி செளிணிது தருவதைப்போல அதே விலையில்தான் ரிலையன்சுக்கும் தருகிறது. ஆனால், தான் சுத்திகரித்த பெட்ரோலிய பொருட்களை ரிலையன்ஸ் இந்திய மக்களுக்கு பயன்படும் வகையில் விற்பனை செய்யாமல் பெருமளவில் ஏற்றுமதி செய்து கொழுத்த லாபம் சம்பாதிக்கிறது. இந்திய மக்கள் பயன்பெறும் வகையில் சேவை செய்வதாக அனுமதி வாங்கிவிட்டு மலைபோல் லாபம் பெற வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்கிறது.

பெட்ரோல் விலையை நிர்ணயிக்கும் உரிமையை பெட்ரோலிய நிறு வனங்களுக்குகே மத்திய அரசு கொடுத்ததன் பின்னணியில் அம்பானியை திருப்தி படுத்தும் நோக்கத்தை தவிர வேறு என்ன இருக்க முடியும்?
நாற்பது வருடங்களுக்கு முன்பு முப்பதாயிரம் ரூபாய் முதலீட்டில் தொடங்கப்பட்ட ஒரு நிறுவனம் இன்றைக்கு லட்சக்கணக்கான கோடிகளை சொத்துக்களாக கொண்டுஷீமீளது என்றால் இந்தியாவில் நிலவும் முரண்பாடு எத்தகையது என்பதை யூகித்துப் பாருங்கள்.

கச்சா எண்ணெயின் விலை உயர்வே பெட்ரோல் டீசல் விலை உயர்வுக்கு காரணம் என்று மத்திய அரசு சப்பைக்கட்டு கட்டியதைப்பார்த்தோம். கச்சா எண்ணெ யின் விலை உலக மார்க்கெட்டில் ஏன் உயர்கிறது?
எண்ணெளிணி விலையை தீர்மானிக்கும் உரிமையை  சார்க் நாடுகள் வைத்திருந்த வரை கச்சா எண்ணெயின் விலை கட்டுக்குள்தான் இருந்தது. அடிக்கடி ஏற்ற இறக்கங்கள் காணப்படவில்லை. ஆனால் விலை தீர்மானிக்கும் உரிமையை ஆன்லைன் வர்த்தக சூதாடிகள் எப்போது பெற்றார்களோ அப்பொழுதே அடிக்கடி விலை உயர்வு என்பது தவிர்க்க முடியாத தாகி விட்டது.

கோல்ட்மேன் சாஸ், சிட்டி குரூப், ஜெபி. மார்க்கன் சேஸ், மம்சன் ஸ்டான்லி போன்ற அமெரிக்க கம்பெனிகள் ஆன்லைன் மூலம் கச்சா எண்ணெளிணி வர்த்தகம் நடத்தி 28 டாலராக இருந்த விலையை தாறுமாறாக உயர்த்தி விட்டன. மேலும் அமெரிக்கா ஈராக் மீது ஆக்கிரமிப்பு போரை நடத்திய தால் கூடுதல் கிணறுகளைத் தோண்ட அரேபிய நாடுகள் அச்சம் கொண்டன. கச்சா எண்ணெயின் உற்பத்தி, வளர்ச்சி விகிதத்திற்கு ஏற்ப உயராமல் போனதற்கு இது ஒரு முக்கியக்காரணம். எனவே கச்சா எண்ணெயின் விலை உயர்வுக்கு அமெரிக்காவும் ஒரு மறைமுக காரணம் என்பதில் மாற்றுக் கருத்துக்கு இடமில்லை.


நமது இந்தியா 70 சதவீதம் கச்சா எண்ணெயை வெளிநாடுகளிலிருந்து இறக்குமதி செய்கிறது. 30சதவீதம் உள்நாட்டிலேயே கிடைக்கிறது. இந்த 30 சதவீத உற்பத்திக்கும் சர்வதேச விலையைக் கணக்கிட்டு கொழுத்த லாபம் அடைந்தும் மத்திய அரசு நஷ்டம் நஷ்டம் என்று அலகிறது. தனியார் நிறுவனத்தைப் போல் லாபத்தை குறிவைக்கும் இந்திய எண்ணெய் நிறுவனங்கள் உண்மையில் நட்டத்தில்தான் இயங்குகின்றனவா என்று இன்று வரை ஒரு குழுவைக் கொண்டு நடுவண் அரசு ஆய்வு செய்ததாக தெரியவில்லை.

அப்படி இருக்கையில் எண்ணெய் நிறுவனங்களின் வாய்மொழியை மட்டும் நம்பிக்கொண்டு சாமான்ய மக்களின் தலையில் மிளகாய் அரைக்கும் இந்த அரைவேக்காட்டு அரசுகள் நமக்குத் தேவைதானா என்கிற கேள்வி எழத்தானே செய்யும். இந்தியாவின் பெரும்பான்மையான ஏழைகளை மேலும் எப்படி ஓட்டாண்டிகளாக்குவது என்பதையே நினைத்து நினைத்து மெலிந்து கொழுத்துப்போகும் ஒரு பொருளாதார வல்லுறு மன்னிக்கவும் வல்லுனரையும் (மன்மோகன்சிங்) அவருக்கு கவடி து£க்கும் காங்கிரஸ் மற்றும் கூட்டணி கட்சிகளை வேரோடும் வேரடி மண்ணோடும் இந்த மண்ணைவிட்டே து£க்கி எறிந்தால்தான் நாடும் நாட்டு மக்களும் நலமாக வாழ முடியும்.

வியாழன், 19 ஜனவரி, 2012

காங்கிரஸை வைக்க வேண்டிய இடத்தில்,,,




இந்தப் பதிவை கொஞ்சம் தாமதமாகத்தான் தருகிறென். இருந்தாலும் அவசியமானது என்பதால் இந்த இடுக்கையை வெளியிடுகிறேன்.

நாங்கள் இல்லாவிட்டால் ஒருவரும் ஆட்சியமைக்க முடியாது, எதையும் செய்ய முடியாது என்று வாய்கிழியப் பேசிவந்த காங்கிரஸாருக்கு கடந்த உள்ளாட்சித் தேர்தலில் சம்மட்டி அடி கிடைத்துள்ளது. இதுதான் காங்கிரஸின் உண்மையான பலம். காமராஜரோடு காங்கிரஸின் கதை முடிந்துவிட்டது என்பதை மக்கள் ஆணித்தரமாக நிரூபித்துள்ளனர் கடந்த உள்ளாட்சித் தேர்தல் முடிவு மூலம்.



தமிழகத்தில் ஓசியிலேயே உடம்பேற்றி வந்த ஒரே கட்சி எது என்றால் அது காங்கிரஸ்தான் என்பதை கருவில் இருக்கும் சிசு கூட சரியாக சொல்லிவிடும். ஆனால் இதை காங்கிரஸார் மட்டும் ஏற்றுக் கொள்ளவே மாட்டார்கள். மாறாக, நாங்கள் யாருடன் இருக்கிறோமோ அவர்களுக்குத்தான் வெற்றி கிடைக்கும். நாங்கள் ஆதரவு தரும் கட்சிதான் ஆட்சியைப் பிடிக்கும் என்று கோஷ்டி கோஷ்டியாக கானம் பாடி வருவார்கள்.



ஆனால் கூரை ஏறி கோழி பிடிக்க முடியாதவன் கதையாகி விட்டது தமிழக காங்கிரஸின் நிலை. ஒரு நகராட்சித் தலைவர் பதவியைக் கூட பிடிக்கத் திராணியில்லாத கட்சியாக கிழிந்த வேட்டி போல காட்சி தருகிறது காங்கிரஸ். காங்கிரஸ் கட்சி தனித்துப் போட்டியிடுவது என்பது இதுவரை நடந்திராத ஒன்று என்றே கூறலாம்.



காரணம், திமுக அல்லது அதிமுக என யாருடைய முதுகிலாவது ஏறி, ஓசி சவாரி செய்வதுதான் அந்தக் கட்சிக்கு வசதியானதாக இருந்தது. ஏசி அறையில் உட்கார்ந்து கொண்டு கதர்ச் சட்டை கசங்காமல் பாலிட்டிக்ஸ் செய்து பழக்கப்பட்டவர்கள் காங்கிரஸார் (காங்கிரஸார் என்று இங்கு நாம் கூறுவது தலைவர்களை -தொண்டர்களை அல்ல).



தமிழகத்தின் மூன்றாவது பெரிய கட்சி, கணிசமான வாக்கு வங்கி உள்ளது என்று கூறிக் கூறியே வேண்டிய சீட்களைப் பெற்று ஓசி பலத்தில் ஊறுகாய் போட்டு வந்தவர்கள் இவர்கள். கடந்த சட்டசபைத் தேர்தலில், திமுகவிடம், 2ஜி விவகாரத்தைக் காட்டிக் காட்டியே சீட் கறந்த காங்கிரஸின் பிடிவாதப் பேரத்தைப் பார்த்து மாற்றுக் கட்சியினரும் கூட கொந்தளித்துப் போனார்கள்.



இப்படி நீ சோறு கொடு, நீ குழம்பு கொடு, நான் உட்கார்ந்து சாப்பி டுகிறேன் கதையாக படு சோம்பேறித்தனமாக அரசியல் செய்துவந்த காங்கிரஸ் உள்ளாட்சித் தேர்தலில் தலை முதல் பாதம் வரை படு அடியை வாங்கி பம்மிப் போய்க் கிடக்கிறது.



இதுதான் காங்கிரஸின் நிஜமான பலம் என்பதை மக்கள் காட்டி விட்டார்கள். பத்து மாநக ராட்சிகளில் போட்டியிட்ட காங்கிரஸ் ஒரு இடத்தில் கூட 2வது இடத்தைப் பிடிக்கவில்லை. பல இடங்களில் 3வது இடத்தைக் கூடப் பிடிக்கவில்லை. மொத் தமே 17 கவுன்சிலர்கள்தான் இக்கட் சிக்குக் கிடைத்துள்ளனர்.



அதை விடக் கேவலமாக கொடி காத்த குமரனைத் தந்த திருப்பூரில் ஒரு கவுன்சிலர் கூட காங்கிரஸுக்குக் கிடைக்கவில்லை. இது நிஜமான காங்கி ரஸாருக்கு பெரும் வேதனை தரும் செய்தியாகும். காங்கிரஸுக்கென்று ஒரு தொண்டர் வட்டம் உள்ள மதுரையிலும் முட்டைதான். சேலத்திலும் ஒன்றும் இல்லை.



அதே போல 125 நகராட்சிகளில் தேர்தல் நடந்த 124 நகராட்சிகளில் ஒரு இடத்தில் கூட தலைவர் பதவி யைப் பிடிக்கவில்லை காங்கிரஸ். காங்கிரஸின் பாரம்பரியப் பகுதிகளான ராஜபாளையம் உள்ளிட்ட இடங்களில் கூட அந்தக் கட்சியால் தனித்து வெல்ல முடியாமல் போனது கேவலத்திலும் படு கேவலமாகும்.

சரி பேரூராட்சியிலாவது ஏதாவது பெயருமா என்று பார்த்தால் மொத்தமே 24 இடங்களில்தான் வெற்றி கிடைத் துள்ளது.



இப்படி எங்குமே காங்கிரஸுக்கு சிறப்பு கிடைக்கவில்லை. மாறாக போன இடங்களில் எல்லாம் மக்களிடமிருந்து பட்டை நாமம்தான் கிடைத்துள்ளது.

வாழ்ந்தால் வாழை மரம் போல வாழ வேண்டும் என்பார்கள். வாழை மரத்தில் தான் அடி முதல் நுனி வரை அத்தனையும் பயன்படும். ஆனால் காங்கிரஸோ, பார்த் தீனியம் செடி போலத்தான் இத்தனை நாளாக இருந்துள்ளது.



அதாவது மற்ற கட்சிகளின் பலத்தைப் பெற்று இது வாழ்ந்து வந்துள்ளது. இந்த கட்சியால் எந்தக் கட்சிக்கும் உண்மையில் லாபம் கிடைக்கவில்லை என்பதே உண்மை. கட்சிகளுக்கு மட்டுமல்ல தமிழகத்திற்கும் கூட காங்கிரஸார் உண்மை யில் எந்தப் பலனும் கிடைக்க வில்லை என்பதை காங்கிர ஸாரே ஒத்துக் கொள்வார்கள்.



இந்தத் தேர்தலின் மூலம் திராவிடக் கட்சிகளான திமுக வுக்கும் சரி, அதிமுகவுக்கும் சரி கிடைத்துள்ள முக்கியப் பாடம் என்னவென்றால் இத்தனை காலமாக, அடிப்படையே இல்லாத காங்கிரஸ் கட்சிக்கு அதிகப்படியான இடம் கொடுத்து விட்டோம் என்பதுதான்.



தமிழர்கள் பாடுபட்டபோதெல்லாம், பரிதவித்த போதெல்லாம், துடித்து துவண்டபோதெல்லாம், உயிரை இழந்து உருக்குலைந்து போனபோதெல்லாம் உதவாமல் போனதுதான் காங்கிரஸின் கை.



தமிழகத்திலும் கூட தமிழகத்தின் எந்தப் பிரச்சினைக்கும் காங்கிரஸ் உதவிக்கு வந்ததில்லை. மாறாக தமிழகத் தின் பிரச்சினைகளிலெல்லாம் நழுவிப் போனது அல்லது இரட்டை வேடம் போட்டு ஏமாற்றியது.



தமிழகத்தின் நதி நீர்ப்பிரச்சினை யாகட்டும், வேறு எந்தப்பிரச்சினை யாகட்டும் காங்கிரஸ் உதவியது என்பது வரலாற்றிலேயே கிடையாது. கூட்டணி சேர வேண்டும், கூட்டாஞ்சோறு ஆக்கி நாம் மட்டும் நன்றாக சாப்பிட வேண்டும். இதுதான் காங்கிரஸின் ஒரே குறிக்கோளாக இருந்தது.



இந்தப் படு தோல்வி இப்படியே நின்று விடக் கூடாது. பொறுப்பான, தமிழகத் திற்கு உதவக்கூடிய தமிழர்களுக்கு உறுதுணையான உண்மையான அரசியல் கட்சியாக காங்கிரஸ் மீண்டும் மாறும் வரை மக்கள் மரண அடி கொடுக்க வேண்டும்.



இதுதாம்ப்பா காங்கிரஸ் என்பதை மக்கள் காட்டி விட்டார்கள். இனியாவது திராவிடக் கட்சிகள் விழிப்புடன் இருந்து, காங்கிரஸை வைக்க வேண்டிய இடத்தில் வைக்குமா என்பதை பொறுத் திருந்துதான் பார்க்க வேண்டும்.

வெந்ததும் வேகததும்...










ன்னன்னே தெரிலீங்க இந்த பத்திரிக்கக் காரங்களும், எதிர்கட்சிக்காரங்களும் என்னமோ நாடே அழிஞ்சு போறாமாதிரி கூப்பாடு போடறாங்க. வேறொன்னுமில்லீங்க, நம்ம முதல்வரு பஸ்ஸூக் கட்டணம், பால்விலை, மின்கட்டணம் இதையெல்லாம் ஒசத்திட்டாங்கன்னு குய்யோ முய்யோ கத்தறாங்க. இது எந்தவிதத்துல நாயமுன்னு தெரிலீங்க.


பின்ன என்னங்க ரயில்வே துறையின் வருமானம் கொறஞ்சிருச்சுன்னு அந்தத்தொறை அமைச்சரு வெசனப் பட்டிருக்கிறாரு. இந்த வெசயத்த கேள்விப்பட்ட நம்ம முதல்வரு சரி பஸ்ஸூல அதிகமான மக்க பயணம் செய்றாங்க. அவிங்கள்ல கொஞ்சம்பேத்த ரயிலுக்கு மாத்தி விட்டம்னா என்னான்னு ரோசன பண்ணியிருக்காங்க. செரி கொஞ்சப்பேரு ரயில்ல போங்கன்னு சொன்னா கேக்கறளவுக்கு நம்மாளுங்களுக்கு கருணையுள்ளம் கொண்ட நம்ம முதல்வரம்மா அளவுக்கு பக்குவம் கெடையாது.


அதனாலதான் ரொம்ப வேதனையோடவே பஸ்ஸூக் கட்டணத்த அதிகரிச்சாரு. அதுக்குப் பிறகுதான் தமிழ்நாட் டுல மின்சார ரயில் மொதக்கொண்டு எல்லா ரயில்லையும் மக்கள் கூட்டம் அல மோதுது. இந்த விசியத்த புரிஞ்சிக்கறளவுக்கு மத்த கச்சிக்காறாங்களுக்கு ஏழாம் அறிவு கெடையாதுனால தேவையில்லாம போராட்டம்னு கௌம்பிட்டாங்க.
அதேமாதிரிதாங்க பால் வெலையேத்தமும். ஹெரிட் டேஜ், ஆரோக்யா, அம்ருதா போன்ற ஏழை பால் கம்பெனிங்க வருமானம் பெருகனும்னா ஆவின் பால் விற்பனை குறையோணும். எல்லோரும் மத்த பாலுங்களையும் பயன்படுத்துங்கன்னு சொன்னாலும் நம்மாளுங்க கேக்க மாட்டாங்க. அதுககு தனியா ரூம் போட்டு யோசிச்ச நம்ம முதல்வரம்மா, ஆவின் பால் வெலைய ஏத்துனா, மத்த கம்பேனி பாலுங்க விற்பன தானா ஒசரும்னு முடிவு செஞ்சாங்க. இதெல்லாம் தப்புன்னு எதிர்கச்சிங்க சொல்றறது எந்தவிதத்துல நாயம்னு ஒரு கேனத்தனாமான வெழக்கத்த சொன்ன எப்படியிருக்கும்....? என்னமோ போங்க, உண்மய சொன்னா, அரசுக்கெதிரா ஒட்டுமொத்த தமிழ்நாட்டு மக்களும் போராட்டத்திலீயா குதிக்கப் போறாங்க...? போங்க சார் குடும்பத்தோட நிம்மதியா டீவில நாடகத்தப் பாருங்க. ஏன்னா அதுதான் நம்ம நாட்டுக்கும், வீட்டுக்கும் ரொம்ப அவசியம்.


-------------------------------------
விங்களுக்கு ஏந்தான் இந்த வேலைன்னே தெரியல? யாருன்னு கேக்கிறீங்களா, இந்த கூடங்குளத்து மக்களத்தான் சொல்றேங்க. கொஞ்சமா வது மனிதாபிமானங்கறது இருக்கோணுங்க. சுமார் 13 ஆயிரங்கோடி ரூபா செலவழிச்சு மின்சார உற்பத்திக்கு தயாரா இருக்குற அணுஉலையை வேண்டாம். இந்த அணுஉலை வெடிச்சா மக்களோட உயிருக்கும், உடைமைக்கும் ஆபத்துன்னும், அணுஉலைங்க வேல செய்யுதோ இல்லீயோ, அதக் காட்டிலும் அந்த உலைங்கள காப்பாத்தறதுதான் பெரிய பிரச்சனைன்னும், தேவையில்லாம நம்மாளுங்க பொரளிய கௌப்பி விடுறாங்க.


மக்களோட இந்த பயத்த போக்கறதுக்காகவே இந்தியா வின் அணு மெக்கானிக் அப்துல் கலாம (மன்னிச்சிருங்க டங்க் சிலிப்பாயிருச்சு. எல்லா தேச பக்தர்களும் அணு விஞ்ஞானின்னு கூப்டறதாலா, வேற வழியில்ல. அதனால, அப்படியே நீங்களும் மாத்தி படிங்க.) கூடங்குள அணுஉலைய ஆய்வு செய்ய அனுப்பிச்சது மத்திய அரசு. இந்த விசியத்துக்கு அப்துல் கலாம அரசாங்கம் தேர்ந்தெடுத்தற்குக் காரணம் அவரு ரொம்ப நேர்மையானவரு. எந்த வம்பு தும்புக்கும் போகதவரு.
அதாவது, குஜராத்துல இரண்டாயிரத்துக்கும் மேற் பட்ட முசுலீம்கள மோடி அரசு கொன்னு குவிச்ச போது இவரு குடியரசு தலைவரா இருந்தாரு. அந்த சம்பவத்த கண்டிக்கறதுகூட நாட்டுக்கு செய்யற துரோகம்னு நெனச்சு வாயே திறக்கல. அந்தளவுக்கு தேசாபிமாணி. நாட்ல எங்கயாவது ஒரு மூலைல போராட்டமோ, புரட்சியோ வெடிச் சரக்கூடாதுங்கற சமூக அக்கறையோடு...! நாட்டுல இருக்கற பள்ளிக்கூடங்க, கல்லூரிங்களுக்கு போயி (முக்கியமா அழுக்குப் படிஞ்ச அரசு பள்ளிகள்ல மட் டும் பேசமாட்டாரு. ஏன்னா இந்த நாட்டோட தேச விரோதிங்க அங்கதானே படிக்கறாங்க. அதாங்க ஏழைங்க) இந்தியா 2020ல வல்லரசாயிரும்னு பேசிட்டு வர்றாரு.


நாடு வல்லரசாகறதுக்கு என்ன செய்யணும்னு கேட்டா எல்லாரயும் கனவு காணச் சொன்ன உத்தமரு. இதனால பல கல்விச் சாலைங்கள்ல பல மாணவர்கள் தூக்கத்துலேயும், பல பெற்றோர்கள் தூக்குலேயும் தொங்கறதுக்குக் காரணம் இவருடைய தத்துவம்தான் காரணம். அப்படிப்பட்டவரு இந்த அணுஉலையப் பத்தி என்னசொல்றாருன்னா, இந்த அணு உல மூன்றாம் தலைமுறை தொழில்நுட்பத்தோட உருவாக்கப்பட்டிருக்கு அதனால இந்த உலைனால எந்த பாதிப்பும் ஏற்படாதுன்னு அடிச்சு சொல்லிட்டாரு.


நல்ல விசயந்தானுங்க. அணு மெக்கானிக்கே (சா...ரிங்ங்ங்க) அணு விஞ்ஞானியே சொன்ன பிறகு இந்த அணு உலைங்க பாதுகாப்பத்தா இருக்கும். அதனால நாட்டோட வளர்ச்சியில முக்கிய பங்கு வகிக்கப்போற இந்த அணுஉலைங்கள மூட வேண்டும்னு போராடறத விட்டுட்டு நல்ல பாதுபாப்போட இருக்கற இந்த உலைங்கள அப்படியே பேத்தேடுத்துட்டுப் போயி நாட்டோட தலைநகரான டெல்லியில வெச்சுக்கோங்கன்னு போராடலாம். என்ன நாஞ்சொல்றது சரிதானுங்களே...?