ஞாயிறு, 14 டிசம்பர், 2014

உங்கள் பாராட்டில் சிறிதும் நியாயமில்லை தோழர்களே.....


விஜய்யின் கத்தி படத்தை இந்திய கம்யூனிஸ்ட் தோழர்கள் அதிகமாக கொண்டாடுகிறார்கள். குறிப்பாக மார்க்சிஸ்ட்கள் மிக அதிகமாகவே கத்தியைத் தலையில் தூக்கி வைக்கிறார்கள்...

அதற்குக் காரணமாக அவர்கள் சொல்வது ஜீவா (எ) ஜீவானந்தம் கதாபாத்திரமும், பன்னாட்டு நிறுவனங்களுக்கு எதிராக நாயகன் பேசும் வசனங்களும்தான்....
தமிழ்நாட்டின் மிகப்பிரபலமான ஒரு நடிகர், அதிகப்படியான பொருட்செலவில் உருவாக்கப்பட்ட வெகுமக்கள் ஊடகமான திரைப்படத்தில், புரட்சிகர வசனங்களை பேசுவது என்பது வரவேற்வக்கத்தக்கதுதான்...
காதல், சண்டை, சேட்டை, நக்கல் என்றிருந்த ஒரு நடிகர் பொதுமக்களை பாதிக்கும் பிரச்சனையை, குறிப்பாக விவசாயிகளின் பிரச்சனையை கையெலடுத்து நடித்திருப்பதும், ஊழல், தீவிரவாதம், ரவுடியிசம் என்று ரீல் ஓட்டிக் கொண்டிருந்த இயக்குநர் ஒருவர் பன்னாட்டு நிறுவனங்களின் முகத்திரையை கிழிக்க முயற்சித்திருப்பதை நீங்கள் பாராட்ட நினைப்பது தவறில்லைதான்....
ஆனால், கத்தி என்கிற கதிரேசனால்தான் விவசாயிகளின் பிரச்சனைக்கு தீர்வு கிடைக்கிறது என்பதை சொல்வதற்கு ஜீவா என்கிற ஜீவானந்தம் என்கிற பாத்திரத்தை இத்தனை மொக்கையாக, சம்பந்தமேயில்லாமல் அழுது புரளும் கோழையாக காட்டியிருப்பதும், அவரோடு சேர்ந்து ஒட்டுமொத்த கிராமமும் கோழைகளின் வாழ்விடமாக காட்டியிருப்பதும் அபத்தத்திலும் அபத்தம் என்பது உங்களுக்கு புரியாமல் போனது ஏன்......?
கார்ஜிக்கும் சிங்கமென வாழ்ந்த ஒரு தோழரின் பெயரைக் கொண்ட ஒரு பாத்திரத்தை பெருமைப்படுத்துகிறேன் பேர்வழி என்று கதறியழும் கையாலாகத கோழையாக்கிய முருகதாஸையும், அந்த பாத்திரத்திற்கு உயிரோட்டம் கொடுத்த விஜயையும் பொதுவுடமை தோழர்கள் கண்டித்திருக்க வேண்டும்... 
மாறாக, கத்தி படத்தை உச்சி முகர்ந்து புலாங்கிதம் அடைவதுதான் எரிச்சலை ஏற்படுத்துகிறது....

‘லைக்கா’வின் முதலீட்டில் தயாரிக்கப்படாமல், ஜீவா என்கிற நிஜ நாயகனை நீர்த்துப் போன பாத்திரமாக காட்டப்படாமல், சம்பந்தமேயில்லாமல் நாயகியை அரைகுறையாக ஆடவிடாமல் படத்தை எடுத்திருந்தால்.... 
உங்களின் பாராட்டில் ஒரு நியாயம் இருந்திருக்கும். நாங்களும் அந்த பாராட்டில் பங்கெடுத்திருப்போம்........

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக