ஜாதிய ஒடுக்கு முறைக்கும் தீண்டாமைக்கும் பெயர் ‘போன’ இந்தியாவில், இன்னும் அந்தக் கொடுமை இம்மியளவும் குறையாத நிலை நீடிக்கிறது.
நாட்டின் வேலைவாய்ப்புக்கு முக்கிய ஆதாரமாகத் திகழும் தனியார் துறையில் தாழ்த்தப்பட்ட மற்றும் பழங்குடி மக்கள் முற்றாகப் புறக்கணிக்கப்படும்
நிலைதான் இப்போதும் உள்ளது.தனியார் தொழிற்சாலைகள் நிறைந்திருக்கும்
பல மாநிலங்களில் தாழ்த்தப்பட்ட மற்றும் பழங்குடி வகுப்பினருக்கான வேலை வாய்ப்பு மிக மிகக் குறைவாகவே உள்ளதாக பல புள்ளிவிவரங்கள்
கூறுகிறது.
மஹாராஷ்டிரா, குஜராத், கர்நாடகா, மத்திய பிரதேசம், ராஜஸ்தான் மற்றும் மேற்குவங்க மாநிலங்களில் பெரும்பான்மையாக இம்மக்களுக்கு தனியார் துறையில் மிகக் குறைந்த அளவே, அதுவும் சாதாரண கூலி வேலைகள் ஒதுக்கப்படுகின்றன.
மஹாராஷ்டிராவில் மொத்த மக்கள் தொகையில் அதற்கேற்ப மக்கள் தொகையில் 43.4 விழுக்காடு மக்கள் பழங்குடியினர். சரி இவர்களுக்கு இந்த
தனியார் தொழிற்சாலைகளில் எவ்வளவு வேலை வாய்ப்பு? 20 சதவீதத்துக்கும் குறைவு. இந்த வேலைகள் அனைத்துமே உடல் உழைப்பு சார்ந்த சாதாரண
வேலைகள்தான்!
வட மாநிலங்களில் டெல்லி மற்றும் ஹரியானாவில் தாழ்த்தப்பட்ட மற்றும் பழங்குடி இனத்தவருக்கு தனியார் துறையில் ஓரளவுக்குதான் வேலை வாய்ப்பு கிடைத்திருக்கிறது. ஆனால் பஞ்சாப் மற்றும் ராஜஸ்தான்
மாநிலங்களில் மக்கள் தொகையில் தாழ்த்தப்பட்ட மற்றும் பழங்குடி இனத்தவரின் விகிதத்தைவிட அவர்களுக்கு தனியார் துறையில் கிடைத்திருக்கும் வேலை வாய்ப்பு விழுக்காடு கணிசமாக குறைந்தே
இருக்கிறது.
நாட்டின் கிழக்கு மாநிலங்களில்தான் அதிகளவு தாழ்த்தப்பட்ட மற்றும் பழங்குடியினர் தனியார் துறைகளில் வேலைவாய்ப்புகளைப் பெற்றிருக் கின்றனர் 19.1% தாழ்த்தப்பட்ட மற்றும் பழங்குடியினர் உள்ளனர். ஆனால், அவர்கள் தனியார் துறைகளில் பெற்றுள்ள வேலை வாய்ப்பு என்னவோ 5 விழுக்காடுதான். இதுவும் கூட கூலி மற்றும் அதற்கு சமமான வேலைகள் தான்!
குஜராத் மற்றும் கர்நாடக மாநிலங்களில் மொத்த மக்கள் தொகையில் தாழ்த்தப்பட்ட, பழங்குடியின மக்கள் தொகையினர் 22% மற்றும் 23%. ஆனால் தனியார் துறை வேலைவாய்ப்புகளில் இவர்கள் பெற்றுள்ளதோ வெறும் 9 விழுக்காடு கூலி வேலைகளே.
இதைவிட கொடுமை என்னவெனில் சத்தீஸ்கர் மாநிலத்தில் ஏராளமான தொழிற்சாலைகள் இருக்கின்றன. என்பது ஆறுதல் பட்டுக்கொள்ளக்கூடிய செய்தி. அதற்குக் காரணம், அப்பகுதி மக்கள் சுயமரியாதை உணர்வோடு விடுதலை வேண்டி போராடி வருவதின் காரணமாகத்தான்.
அதேபோல் கேரளம் 100 விழுக்காடு கல்வி கற்ற மாநிலம். அம்மாநிலத்தின் மொத்த மக்கள் தொகையில் தாழ்த்தப்பட்ட மற்றும் பழங்குடி இன மக்களின்
விழுக்காட்டைவிட கூடுதலாக தனியார் துறையில் வேலை வாய்ப்பு அவர்களுக்கு கிடைத்திருக்கிறது.இந்த விசயத்தில் தமிழ்நாடு ஓரளவுக்கு பரவாயில்லை என்றுதான் சொல்லவேண்டும்.
தமிழ்நாட்டில் தாழ்த்தப்பட்ட மற்றும் பழங்குடியினர் எண்ணிக்கை 20 சதவீதமாக உள்ளது. இவர்களில் 18 சதவீதம் பேருக்கு தனியார் துறைகளில் வேலைகள் அளிக்கப்படுகின்றன. ஆனால், அத்தகைய வேலைகளில் அதிகாரிகள் மட்டத்தில் அதிகம் சேர்க்கப்படுவ தில்லை. மாறாக, உயர் வகுப்பினர் ஈடுபட விரும்பாத வேலைகள் மட்டுமே அதிகப்படியாக அவர்களுக்கு ஒதுக்கப்படுகிறது. சுயமரியாதை ஜாதி ஒழிப்பு என்றிருந்த பெரியார் பிறந்த தமிழ்நாட்டின் நிலை இது என்றால், மற்ற மாநிலங்களைப் பற்றி சொல்லவா வேண்டும்.
தனியார்துறையிலும் இடஒதுக்கீடு பின்பற்ற வேண்டும் சமூகநிதி காக்கப்பட
வேண்டும் என்பது தமிழகத்தின் நீண்டகால கோரிக்கையாக இருந்து வருகிறது.இந்த கோரிக்கையை வலுவிழக்கச் செய்வதில் குறியாக உள்ளனர் ஆதிக்க ஜாதியினர். அவர்களின் கட்டுப்பாட்டில்தான் பெரும்பாலும் தனியார் நிறுவனங்கள் உள்ளன.
நான் ஜாதி முறைக்கு எதிரானவன். ஜாதிய ஒடுக்குமுறை எனக்குப் பிடிக்காது என்று கூறிக் கொள்ளும் இந்த ஜாதீய சக்திகள், உள்ளுக்குள் இரட்டை டம்ளர் முறைகளை ஆதரிப்பவர்களாகவும், இட ஒதுக்கீட்டை ஒழிப்பதில் ஆர்வம் காட்டுகிறவர்களாகவும் உள்ளனர். அதாவது தாழ்த்தப்பட்ட மற்றும் பழங்குடியின மக்கள் தங்களுக்கு நிகரான பதவிகளை தனியார் துறையில்
பெற்றுவிடக் கூடாது என்பதில் குறியாகவும் உள்ளனர்.